திருக்குறள் கதைகள் கடவுள் வாழ்த்து

திருக்குறள் கதைகள் பகுதி-1:

அறத்துப்பால் (பாயிரவியல்)
கடவுள் வாழ்த்து




1)அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு

2) கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

3) மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

4) வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு 
யாண்டும் இடும்பை இல.

5) இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

6) பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

7) தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தோருக்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

8) அறிவாளி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
பிறவாழி நீதந்தல் அரிது.

9) கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

10) பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் 
இறைவன் அடிசேரா தார்.

அன்று சூரிய உதயம் 6:24 அர்ஜுனன் குளித்து முடித்துவிட்டு கோயிலுக்கு வந்தான்.
ஆதி பகவனே,எழுத்துக்கலாம் முதன்மையாக அகரம் இருப்பது போல உலகிற்கு முதலானவனே உனது திருவடிகளை வணங்காதவர்கள் பெரும் கல்வி கற்றாலும் அதனால் எந்தவிதமான நன்மைகளையும் பெற மாட்டார்கள்.

மலர் மீது வீற்றிருக்கும் இறைவா உன்னை இடைவிடாது நினைப்பவர்கள் நெடுங்காலம் இன்பமாக வாழ்வார்கள்.

விருப்பு வெறுப்பு இல்லாமல் உன்னை நினைப்பவர்களுக்கு வாழ்க்கையில் எத்தகைய துன்பமும் ஏற்படாது.

கடவுளின் உண்மைத்தன்மையை முழுமையாக அறிந்து கடவுளை வணங்குபவர்களுக்கு எத்தகைய துன்பமும் ஏற்படுவதில்லை.

ஐம்பொறிகளால் வரும் ஆசையை நீக்கி 
கடவுளை மனமோடு தொழுபவர்களுக்கு
 எத்தகைய துன்பமும் ஏற்படுவதில்லை.

கடவுளின் திருவடிகளை வணங்குபவர்களுக்கு மனக்கவலை ஏதும் ஏற்படாது.


அறக்கடலான கடவுளின் திருவடிகளை வணங்காதவர்கள் உலக ஆசை என்னும் கடலை கடக்க முடியாது.

கேட்க முடியாத காதுகள், பார்க்க முடியாத
கண்கள் முதலியன போன்ற எண்குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவன் தலையும் பயனற்றதாகும்.

இறைவா உனது திருவடிகளை வணங்காதவர்கள் தான் பிறவி பெருங்கடலை கடக்க முடியும் மற்றவர்கள் கடக்க முடியாது.

என்று மனதில் கூறி வழிபட்டார் அர்ஜுனன்.

Post a Comment

Previous Post Next Post