ஓம் முருகா
அருணகிரிநாதர் பாடிய முத்தைத்தரு என்னும் பாடலின் விளக்கத்தை இப்போது பார்ப்போம்.
முத்தைத்தரு பத்தித் திருநகை
வெண்முத்திற்கு நிகரான நிறத்தையும், அழகான பல்வரிசையையும் அமைந்த
அத்திக்கு இறை
தேவயானை தேவியின் தலைவனே
சத்திச் சரவண
சக்திவேல் ஆயுதத்தை ஏந்திய சரவணபவக் கடவுளே
முத்திக்கொரு வித்துக் குருபர
மோட்சத்திற்கு ஒப்பற்ற விதையாக விளங்கும் ஞானக் குருவே
எனவோதும் மக்கட்பரமற்கு
என்று துதிக்கும் முக்கண்ணர் பரமசிவனார்க்கு
சுருதியின் முற்பட்டது கற்பித்து
வேதங்களுக்கு முதன்மையான ஓம் என்ற மந்திரத்தை உபதேசித்து,
இருவரும்
மும்மூர்த்திகளில் எஞ்சியுள்ள திருமால், பிரம்மா இருவரும்
முப்பதுமுவர்க்கத்து அமரரும் அடிபேண
முப்பத்து முக்கோடி தேவர்களும் அடிபணிய நின்றவாற
பத்துத் தலை இந்தக் கணைதொடு
பத்துத் தலை இராவணன் தலைகள் சிதறுமாறு அம்பை விட்டு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருத்து
ஒப்பற்ற மந்தர் மலையான மத்தைக் கொண்டு பாற்கடலை கடைந்து ,
ஒரு பட்டம் பகல் திகிரியில் இரவாக
ஒரு பகல்பொழுதை வட்டமான சக்கர இருந்ததால் இரவாக்க்,
பத்தற்கு இரதத்தை கடவிய
நண்பனாகிய அர்ச்சுனனுக்கு தேர்பாகனாக வந்து தேர்வினை செலுத்திய
பச்சைப் புயல் மெச்சத் தகுபொருள்
பசுமையான நீலமேகவண்ணன் பாராட்டும் பெருமாளே
பட்சத்தோடு ரஞ்சித் தருள்வதும் ஒரு நாளே
பரிவோடு என்னை காத்தருளும் நாள் ஒன்றும் உண்டோ
தித்தித்திய ஒத்தப் பரிபுர
தித்தித்திய என்ற வாழ்த்துக்கு ஒத்து, சிலம்புகள் அணிந்த
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
நாட்டிய பாதங்களை வைத்து காளிதேவி
திக்கொட்க நடிக்க
திசைகளில் எல்லாம் சுழன்று தாண்டவம் செய்யவும்
கழுகோடு கழுதாட
கழுகுகளோடு பேய்கள் சேர்ந்து
ஆடவும்
திக்குப்பரி அட்டப் பயிரவர்
எட்டுத் திக்குகளிலும் உலகத்தை தாங்குகின்ற அஷ்ட பயிரவர்கள்
சித்ரப்பவுரிக்கு
இந்த அழகிய கூத்துக்கு ஏற்ப
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக எனவோத
தொக்குத்தொகு என்ற தால ஓசையை
கொத்துப்பறை கொண்ட
கூட்டாக பற்பல தாலவைத்தியங்கள் இசைக்க
களமிசை முதுகூகை
போர்க்களத்தில் கீழ்க் கோட்டான்கள்
குக்குக்குகு குரங்குகள் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென கொட்புற்றெழ
குக்குக்குகு குரங்குகள் குகுகுகு என்ற ஒசையோடு குத்திப் புதை, புகுந்து பிடி என்றெல்லாம் குழறி வட்டமாக சுழன்று மேலே எழவும்
நட்பற்ற அவணரை
சினேக எண்ணம் விடுத்து விரோத மணப்பான்மை கொண்ட
அசுரர்களை
வெட்டிப்பலியிட குலகிரிகுத்துப்பட
கொன்று பலி கொடுத்து , கெட்டவர்கள் குலம் தூளாக
ஒத்துப் பொரவல பெருமாளே
தர்ம மார்க்கத்துக்கு பொருந்த போர் செய்யவல்ல பெருமானே
முருகா முருகா முருகா முருகா முருகா!
Tags:
ஆன்மீகம் மற்றும் ஜோதிடம்
