பல்லவர்கள் சோழர்கள் நாயக்கர்கள் காலத்தில் கூத்துக்கலை

பல்லவர்கள் சோழர்கள் நாயக்கர்கள் காலத்தில் கூத்துக்கலை:



சங்கமருவிய காலத்தில் களப்பிரர்கள் ஆட்சியில் நலிவுற்றிருந்த கலைகள் பல்லவர் காலத்தில் மீண்டும் உயிர்பெற்றன. பல்லவர்கள் சிற்பம் ஓவியம் ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் தந்தனர் கூத்துகலை பெரிதும் வளர்க்கப்படவில்லை ஆனாலும் மெல்ல உயிர் பெற்றது கோயிலில் முறையாக நடனமாட கூத்தர்களை பயிற்றுவித்து பல்லவர்கள் நியமித்தனர்.
இவர்கள் தேவரடியார், தளிச்சேரிப் பெண்டுகள், கூத்திகள் எனக் கோயில் நடனப் பெண்டிர் அழைக்கப்பட்டனர்.

பல்லவர்கள் கூத்துக்களையின் வாயிலாக முறைப்படுத்தப்பட்ட நாட்டியமாக பரதக் கலையை தோற்றுவித்தனர். 

சோழர்கள் காலத்தில் இக்கலை மேலும் நன்கு வளர்ச்சியுற்றது தஞ்சை கோயிலில் மட்டும் 400 தேவரடியார்கள் இருந்தனர். அவர்களுக்கு ஆளுக்கு ஒரு வேலி நிலம் கொடுக்கப்பட்டது. சோழர்கள் காலத்தில் சாக்கைக் கூத்து பெரிதும் போற்றப்பட்டது.நட்டுவக்காணி என்பது அவர்களுக்கு தரப்பட்ட நிலக்கொடைை ஆகும். நாட்டிய மகளிருக்கு தலைக்கோலி பட்டம் அளிக்கப்பட்டது. நாட்டிய ஆசிரியர் நிருத்தப் பேரரையன் என்னும் பட்டம் பெற்றார்.

நாயக்க மன்னர்கள் தேவதாசி என அழைக்கப்படும் ஆடல் மகளிரை கோயில்களில் அமர்த்தினர்.அவர்கள் பூசையின் போது சிலைக்கு முன் நடனமாடுவர்.பெண்கள் ஆடல் பாடலில் வல்லவர்கள். இவர்கள் இறைவனுக்கு என விதிக்கப்பட்டவர்கள்.இவர்கள் ஆடவர் எவரையும் மணவார். திருக்கோயில் பணிகளுக்கே தன்மை அர்ப்பணித்தனர். பிற்காலத்தில் தேவதாசி முறை அறவே ஒழிக்கப்பட்டது.

Post a Comment

Previous Post Next Post