திருக்குறள் கதைகள் வான்சிறப்பு


அறத்துப்பால் (பாயிரவியல்)
வான் சிறப்பு




1)வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.

2)துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

3)விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.

4)ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.

5)கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.

6)விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.

7)நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.

8)சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

9)தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.

10)நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.

அர்ஜுனன் பெரும் விவசாயி அவரும் அவரது நண்பர் கிருஷ்ணரும் வயலுக்கு சென்றனர்.

அப்போது அர்ஜுனன்,
இம் முறை மழை பொய்த்து விட்டது மழை பெய்வதால் தான் உலகம் வளத்தோடு வாழ்கிறது. மக்கள் மகிழ்வோடு வாழ்கின்றனர். அதனால் மழை அமிர்தம் போன்றது. என்பவர்களுக்கு நல்ல உணவு வகைகளை உண்டாக்கி கொடுப்பதோடு தானும் உணவாய் என்ற பெருமை மழைக்கு மட்டுமே உண்டு. மழை பெய்யாவிட்டால் கடலால் சூழ்ந்த இவ்வுலகம் பசியில் வாடும். மழை வளம் குறைந்தால் உழவர்கள் ஏர் கொண்டு உழ முடியாது. உரிய காலத்தில் பெய்யாமல் நம்மை வருத்துவதும் மழை வருந்தும் உயிர்களுக்கு பெய்து வாழவைப்பது மழைதான். வானம் இரங்கி மழை பெய்யாவிட்டால் பூமியிலுள்ள பசும் புல்லும் கருகி அழிந்து விடும். தெய்வங்களுக்கு செய்யும் பூஜையைத் நடைபெறாது திருவிழாக்களும் நடைபெறாது.மழை பெய்யாவிட்டால் பிறர் பொருட்டு செய்யும் தானமும் நடைபெறாது தன் பொருட்டு செய்யும் தவமும் நடைபெறாது. எந்த நிலையில் உள்ளவர்களுக்கும் நீர் இல்லாவிட்டால் மகிழ்ச்சி இராது. ஒழுக்கமும் இல்லாமல் போய்விடும் இப்போ ஊரில் அதைத்தான் காணமுடிகிறது என்கிறார் அர்ஜுனன்.

Post a Comment

Previous Post Next Post