நாளந்தா பல்கலைக்கழகம்
- நாளந்தா பல்கலைக்கழகம் ஐந்து மற்றும் ஆறாம் நூற்றாண்டில் குப்தப் பேரரசின் ஆதரவில் தழைத்தோங்கியது. பின்னர் கன்னோசியை சேர்ந்த ஹர்சரின் ஆதரவில் வளர்ச்சி அடைந்தது.
- நாளந்தா பல்கலைக்கழகத்தில் பௌத்த தத்துவமே முக்கிய பாடமாக இருந்தது. யோகா வேத இலக்கியங்கள் மருத்துவம் ஆகியவையும் கற்பிக்கப்பட்டன.
- இந்த பல்கலைக்கழகத்தில் யுவான்-சுவாங் பௌத்த தத்துவத்தைப் பற்றி படிக்க பல ஆண்டுகள் செலவிட்டார்.(ஹர்ஷர் யுவான்-சுவாங்கை ராஜ்மஹால்(ஜார்க்கண்ட்) அருகே உள்ள கஜன்கலால் என்ற இடத்தில் சந்தித்தார்.சி-யூ-கி என்றழைக்கப்படும் யுவான் சுவாங்கின் பயன ஆவணங்கள் ஹர்ஷரின் ஆட்சியில் உள்ள பொருளாதார வளர்ச்சி சமூக பண்பாடு போன்றவற்றை அறிய உதவுகிறது.
- அந்த வளாகத்தில் எட்டு மகா பாடசாலைகளும் மூன்று மிகப்பெரிய நூலகங்களின் இருந்தன.
- நாளந்தா பல்கலைக்கழகம் பக்தியார் கில்ஜி என்பவரின் தலைமையில் வந்த மம்லுக்கள் என்று அழைக்கப்பட்ட துருக்கிய இஸ்லாமிய அடிமை வீரர்களால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
- நாளந்தா பல்கலைக்கழகம் யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.
தீதும் நன்றும் பிறர் தர வாரா
Tags:
TNPSC