தெரு விளக்குகள் பழுதடைந்துள்ளது தொடர்பாக கடிதம் எழுதுவது எப்படி?

தெரு விளக்குகள்(மின் விளக்குகள்) பழுதடைந்துள்ளது தொடர்பாக மின் வாரிய அலுவலருக்கு கடிதம் எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.

அனுப்புநர்

பெயர்,

முகவரி,

இடம்.

பெறுநர்

உயர்திரு மின்வாரிய செயற்பொறியாளர் அவர்கள்,

செயற்பொறியாளர் அலுவலகம்,

இடம்.

 ஐயா,

பொருள்: தெரு விளக்குகள் பழுது நீக்குதல் தொடர்பாக.

பெரியார் நகரில் கடந்த இரு  வாரங்களாக தெருவிளக்குகள் பழுதடைந்துள்ளது.இதனால் எங்கும் இருள் சூழ்ந்துள்ளது.இரவில் தெருவில் நடந்து செல்வோர் பள்ளம் மேடு தெரியாமல் கீழே விழும் நிலைக்கு ஆளாகின்றனர்.மேலும் இருளைப் பயன்படுத்தி சில சமூக விரோத செயல்களும் நடக்கின்றன எனவே எங்கள் தெருவில் பழுதடைந்துள்ள மின்விளக்குகளை சரிசெய்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி

இப்படிக்கு,

உங்கள் பெயர்.

நாள்:

இடம்: 

உறைமேல் முகவரி:

பெறுநர்

உயர்திரு மின்வாரிய செயற்பொறியாளர் அவர்கள்,

செயற்பொறியாளர் அலுவலகம்,

இடம்.

Post a Comment

Previous Post Next Post