21 பந்தி 61 சேனைகள் விளக்கம்:
தென் மாவட்டங்களில் இந்த வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது.21 பந்தி என்பது ஒரு கோவிலில் இருக்கும் 21 தெய்வங்களை குறிக்கும்.61 சேனைகள் என்பதும் தெய்வங்கள் தான்.இந்த வழிபாடு 3 வகை உள்ளது.ஒன்று குருநாதன் பந்தி, இரண்டாவது ஐயனார் பந்தி, மூன்றாவது கருப்பணசாமி பந்தி ஆகும்.
குருநாதன் பந்தி :
குருநாதன் பந்தி என்பது சிவனார் பந்தி அவரே தலைவர்.21தெய்வங்களின் தலைமை அங்காள ஈஸ்வரி அம்மன்.. இந்த குருநாதன் பந்தி அதிகம் திருநெல்வேலி பகுதியில் சிறப்பு வாய்ந்தது.அனைத்து பந்திகளிலும் ஒரு தெய்வம் இருக்கும்.அவர் தான் பேச்சி அம்மன்.இவர் காளி அவதாரம். காளியம்மன் ஒருசில பந்திகளில் இருப்பார். ஆனாலும் பேச்சி அம்மன் அனைத்து பந்திகளிலும் இருப்பார்.
குருநாதன் பந்தியில் முறையே கருப்பணசாமி, சுடலை மாடன், பைரவர், இருளப்பன், லாடசன்னாசி,ராக்காயி அம்மன், பேச்சி அம்மன் முறையே தலைமையாக இருப்பார்கள்.
அனைத்து பந்திகளிலும் 61சேனை தெய்வங்கள் மாறாது. 21 பந்திகள் மாறுபடும்.அவர்களின் தலைமை மாறுபடும்.
ஐயனார் பந்தி :
இந்த பந்திக்கு ஐயனார், பூரணம், பொற்களை தான் தலைவர்.இந்த ஐயனார் பந்தியில் தலைமை பீடம் ஒவ்வொரு ஐயனார் பந்திக்கும் மாறுபடும்.குறிப்பாக காரையார் சொரிமுத்து ஐயனார் பந்தியில் சங்கிலி பூதத்தார் தான் தலைமை.பிறகு கருப்பணசாமி.சங்கிலி கருப்பசாமிக்கு சின்ன கருப்பன், முத்து கருப்பன் என துணை இருப்பர்.
ஐயனார்க்கு லாட சன்னாசி,அக்கினி வீரபத்திரன் துணை இருப்பர்.
சோணையாக்கு இருளப்பன், முனியாண்டி துணை இருப்பர்.
கருப்பணசாமி பந்தி :
கருப்பசாமி பந்தியில் கருப்பன் தான் தலைவர். தலைமை ஒவ்வொரு கருப்பசாமி கோவிலுக்கு ஏற்ற மாறி மாறுபடும்.அதிகமாக இருளாயி, ராக்காயி அம்மன் தலைமையாக இருப்பர்.
கருப்பணசாமி பந்தி பற்றி பெரும்பாலும் அனைவருக்கும் தெரிவதில்லை. கருப்பசாமி பந்தியில் ஐயனார் இருக்கமாட்டார்.ஏன்னெனில் ஐயனார் அனைவருக்கும் தலைமை தெய்வம். அதனால் 21 தெய்வங்களாக வரமாட்டார்.
அதிகமான கருப்பசாமி கோவிலில் இருளாயி தான் தலைமை.18ம் படி கருப்பன், சங்கிலி கருப்பன் பந்தியில் ராக்காயி அம்மன் தலைமை.
சங்கிலி கருப்பன் பந்தியில் சில இடங்களில் சீலைக்காரி அம்மன் தலைமையாக இருப்பார்.சீலைகாரி அம்மன் சங்கிலி கருப்பனின் உடன்பிறவா தங்கை.தீயில் மாண்டு தெய்வமாக மாறிய சீலைக்காரி அம்மன் சங்கிலி கருப்பன் பீடத்தில் தஞ்சம் அடைந்தார்.
இது தான் 21 பந்தி 61 சேனைகள்.61 தெய்வங்கள் மாறாது.21தெய்வங்கள் மாறும்.அவர்களின் தலைமை மாறும்.
வெண்ணிமுத்து அய்யனார் துணை
ஐந்து பனை கருப்பசாமி துணை