செவ்வாய் கேது இணைந்திருந்தால் என்ன பலன்

செவ்வாய் கேது சேர்ந்திருந்தால் என்ன பலன் என்று இப்போது பார்ப்போம்.

செவ்வாய் கேது சேர்க்கை 

செவ்வாய் சகோதர காரகன் மற்றும் மைத்துனன் (மச்சான்) உறவை குறிப்பவர். மூலநூல்களில் பெண்களுக்கு களத்திர காரகன் (கணவனை குறிக்கும் கிரகம்) செவ்வாய் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.கேது ஞானக் காரகன்.எதையும் தடை செய்வது கேதுவின் இயல்பு.

இந்த சேர்க்கை சுபத்துவமாக இருந்தால் போதை மருந்து தடுப்பு பிரிவு, தீவிரவாத தடுப்பு பிரிவு, போலிஷ் துறையில் செக்போஸ்டில் வேலை, சட்டத்துறை போன்ற வேலைகளில் சிறப்பாக செயல்பட்டுவார்கள்.

செவ்வாய் கேது சேர்க்கை உள்ளவர்கள் எப்போது கோபப்படுவார்கள் என்று யாருக்கும் தெரியாது. பார்ப்பதற்கு சாது போல இருப்பார்கள் திடீரென கோபத்தின் உச்சிக்கே சென்று விடுவார்கள்.

செவ்வாய் கேது சேர்க்கை உள்ளவர்கள் தங்களை மற்றவர்களை விட திறமையானவர்களாக நினைப்பார்கள், அதை இவர்கள் வெளியில் கூறாவிட்டாலும் இவர்களுக்கு அந்த எண்ணம் எப்போதும் இருக்கும். செவ்வாய் கேது சேர்க்கை உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கையும் அதிகம் இருக்கும் அதே சமயம் பயமும் அதிகம் இருக்கும் (தனிமையில் இருக்கும் போது ஏதோ ஒரு அச்ச உணர்வு இவர்களுக்கு ஏற்படும்).

சகோதர வர்க உறவுகளோடு சொத்து பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. சொத்து பாகப்பிரிவினை செய்யும் போது இவர்களுக்கு ஏமாற்றம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. பத்திர பதிவு செய்யும் போது இவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

நல்ல புகழ் பெற்ற கைராசியான மருத்துவர்களை உருவாக்குவதும் இந்த இணைவே.நுனுக்கமான மறைமுகமான விஷயங்களை கண்டறிவதில் இவர்கள் வல்லவர்கள்.

செவ்வாய் கேது சேர்க்கை உள்ளவர்கள் ரம்மி (சீட்டாட்டம்) பணம் வைத்து விளையாடுவது, சூதாட்டத்தில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.

செவ்வாய் கேது இணைந்து செவ்வாய் அல்லது கேது புத்தி நடப்பில் வந்தால் இல்லற வாழ்வில் முழுமையாக ஈடு படாமல் போவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.ஆண்களுக்கு வீரியம் குறைவதற்கு வாய்ப்புள்ளது. இவர்களுக்கு வளைந்து கொடுத்து பேசத் தெரியாது இதனால் பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் கேது இணைவு பலன் 

ஆண்கள் ஜாதகத்தை விட பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் கேது சேர்க்கை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதற்கு காரணம் கணவனை குறிக்கும் கிரகமாக செவ்வாய் வருவதே காரணம்.

செவ்வாய் கேது சேர்க்கை உள்ள பெண்கள் காதலித்து திருமணம் செய்திருந்தாலும் திருமணத்திற்கு பிறகு மனக்கசப்பு வந்தே தீரும். இந்த சேர்க்கை உள்ள பெண்களுக்கு குடும்பத்தில் பற்று இல்லாத கணவன் அமைய வாய்ப்புள்ளது. பெண்கள் தங்கள் குடும்ப வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க முடியாமல் போவதற்கு இந்த கிரகச் சேர்க்கைக்கு முக்கிய பங்கு உண்டு.

இந்த இணைவில் சில நல்ல பலன்களும் உள்ளன. செவ்வாய் கேது சேர்க்கை உள்ள பெண்கள் ஒரு குடும்பத்தை ஆண் தாங்குவது போல தாங்குவார்கள். கணவர் மற்றும் தனது சகோதரர்களுக்கு நிறைய உதவி செய்வார்கள்.ஆனால் அவர்களால் இவர்களுக்கு வருத்தம் மட்டுமே மிஞ்சும். சிங்கப் பெண்களை உருவாக்குவதும் இந்த சேர்க்கை தான்.

செவ்வாய் கேது சேர்க்கை பரிகாரம்:

முருகன் கோவிலில் உள்ள விநாயகரை வழிபட்டு பிறகு முருகப்பெருமானை வழிபடுவது இந்து சேர்க்கைக்கு சிறந்த பரிகாரம் ஆகும்‌.
 ஆண்கள் முடிக்காணிக்கை செய்யலாம். பெண்கள் முடிக்காணிக்கை செய்ய வேண்டிய அவசியமில்லை, அதற்கு பதிலாக வேல் தரிசனம் செய்யலாம் (அதாவது ஒரு வேல் வாங்கி வீட்டில் அரிசி அல்லது நெல் நிரப்பிய பாத்திரத்தில் வேலை வைத்து வழிபடுவதன் மூலம் இந்த தோஷம் வெகுவாக குறையும்). பெண்கள் வீட்டில் வேல் வைத்து வழிபடுவதன் மூலம் இந்த சேர்க்கையால் ஏற்படும் தோஷம் வெகுவாக குறையும்.

Post a Comment

Previous Post Next Post