முதியோர் உதவி தொகை திட்டம்

முதியோர் உதவி தொகை திட்டம்


ஆதரவற்ற நிலையில் இருக்கும்  முதியவர்களுக்கு உதவவும், அவர்களின் துயரத்தை போக்கவும் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த திட்டம் தான் முதியோர் உதவித் தொகை திட்டம்.

இத்திட்டத்தின் கீழ் பயன் பெறுபவர்கள் யார்:

கணவன் அல்லது மனைவி  இல்லாமல் இருப்பவர்கள், மிக நெருங்கிய உறவுகள் அல்லது பிள்ளைகள் இருந்தும் அவர்கள் ஆதரவு கிடைக்காமல் துன்பப்படும் அறுபது வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஆதரவற்ற முதியோர் என்று குறிப்பிடப்படுகின்றனர்.அவர்கள் அனைவரும் இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள் ஆவார்கள்.

முதியோர் ஓய்வூதிய உதவித் தொகை திட்டம்:

அறுபது வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் யாருடைய ஆதரவும் இல்லாமல் வாழும் முதியோர்களுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கப்படுகிறது.

தேவையான சான்றிதழ்கள்:

  • ஆதார் அட்டை.
  • இருப்பிடச் சான்றிதழ்.
  • வயது சான்றிதழ்.
  • ரேஷன் கார்டு.

எவ்வாறு விண்ணப்பிப்பது என்று இப்போது பார்ப்போம்:

தங்களுடைய தாலுகா எதுவோ அங்கு சென்று தேவையான ஆவணங்கள்  கொடுத்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பங்கள் தாசில்தார் அலுவலகத்தில் இருந்து கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வரும்.
கிராம நிர்வாக அலுவலர் நீங்கள் கொடுத்த சான்றிதழ் சரிதானா என்பதை சரிபார்ப்பார்.

எத்தனை ஆண்டுகள் உதவி தொகை வழங்கப்படும்:

சம்பந்தப்பட்ட அலுவலர்கள் விண்ணப்பத்தைை பரிசீலனை செய்த பிறகு மாதம் ரூபாய் 1000 வீதம் இறக்கும் வரை உதவி தொகை வழங்கப்படும்.

முதியோர் உதவித் தொகைக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்.

Post a Comment

Previous Post Next Post