நான் சனி பேசுகிறேன்

வெண்ணிமுத்து அய்யனார் துணை

"ஓம் காகத் வஜாய வித்மஹி கட்க ஹஸ்தாய தீமஹி தன்னோ சனிப் பிரசோதயா"



என் பெயர் சனி நான் கர்ம பலனை அளிப்பவன்.என்னுடைய வக்ர பார்வை நல்லவர்களுக்கு நல்ல பலனையும் கெட்டவர்களுக்கு தீமையான பலனையும் தரும்.ஒரு குற்றத்தை செய்பவனை விட அதை தூண்டி விட்டு அமைதியாக இருப்பவனுக்கே நான் தண்டனை அதிகம் அளிப்பேன்.நான் எப்போதும் அனைவருக்கும் ஒரு வாய்ப்பை அளிப்பேன்.என்னை ஆயுள் காரகன் என்றும் அழைப்பர்.நான் தேவர்களின் பக்கமும் இல்லை அசுரனின் பக்கமும் இல்லை.நான் என்றும் நீதியின் பக்கமே இருப்பேன்.என்னுடைய வேலை அசுத்தத்தை சுத்தம் செய்வது ஆகும்.உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதும் என் வேலையே.நான் உங்களுக்கு கூறும் அறிவுரைகள்

1) உங்களுக்கு ஒருவன் அறிவுரை கூறினால், அவன் நல்லவனா, அவன் இந்த அறிவுரை கூற சரியானவன் தானா என்பதை நீங்கள் நிச்சயம் அறிய வேண்டும்

2) என்றும் தர்மத்தை கடைபிடியுங்கள்

3) வினை விதைத்தவன் வினை அறுப்பான்

முடிந்த வரை அனைவருக்கும் நல்லதே செய்வோம்.நல்லது செய்தாலே அந்த சனீஸ்வரரின் அன்புக்குடையவர்களாக நாம் மாறலாம்.

1 Comments

  1. சனீஸ்வரரே போற்றி

    ReplyDelete
Previous Post Next Post