இது சென்னைக்கு அருகில் கிழக்குக் கடற்கரையில் மகாபலிபுரம் செல்லும் வழியில் அமைந்துள்ளது.
இது சென்னையில் பெசன்ட் நகர் பகுதியில் அமைந்துள்ளது. மெரினா இக்கடற்கரையின் தெற்கில் அமைந்துள்ள இக்கடற்கரையில் அஷ்டலட்சுமி கோயிலும்,வேளாங்கன்னி தேவாலயமும் அமைந்துள்ளன.
முந்தைய சென்னை ஆளுநர் எட்வர்ட் எலியட்டின் நினைவாக இக்கடற்கரைக்கு எலியட்ஸ் கடற்கரை என்று பெயரிடப்பட்டது.
இக்கடற்கரைக்கு ஓர் அடையாளமாக கார்ல் இசுமிட் நினைவுச் சின்னம் விளங்குகிறது.கடலில் மூழ்கி கொண்டிருந்த ஒருவரைக் காப்பாற்றும் பொருட்டுத் தன்னுயிரையே ஈந்த டச்சு மாலுமியின் நினைவுச் சின்னம் இது.
3. மெரினா கடற்கரை:
இது ஒரு மணற்பாங்கான கடற்கரை,உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையான இதன் நீளம் 13கி.மீ.
வங்கக்கடலோரமாக சென்னையில் அமைந்துள்ள வி.ஜி.பி. தங்கக் கடற்கரை சென்னையின் முக்கிய சுற்றுலா மையமாக விளங்குகிறது.
இது கடலூர் மாவட்டத்தில் கடலூருக்கு அருகில் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது சோழமண்டலக் கடலோரங்களில் அமைந்துள்ள இரண்டாவது நீளமான கடற்கரையாகும். மேலும் இது ஆசியாவின் நீளமான கடற்கரைகளில் ஒன்றாகத் திகழ்கின்றது.
இலங்கையிலுள்ள தலைமன்னாரிலிருந்து 29 கி.மீ தொலைவில், பாம்பனுக்குத் தென்கிழக்கில் தனுஷ்கோடி அமைந்துள்ளது.