நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லி மலையில் அமைந்துள்ளது பஞ்சுநதி என்ற நீரோடையானது கொல்லிமலை உச்சியிலுள்ள அரப்பளீஸ்வரர் ஆலயத்திற்கருகில் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியாக வீழ்கின்றது.
2)அய்யனார் நீர்வீழ்ச்சி:
விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையத்திற்கு 10 கி.மீ. மேற்காக மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது.
3)கேத்தாரின் நீர்வீழ்ச்சி:
கோக்தகிரியில் காப்பிப் பயிரை அறிமுகப்படுத்திய எம்.டி.காக்பர்ன் என்பவரின் மனைவி கேத்தரின் நினைவாக இதற்கு கேத்தரின் நீர்வீழ்ச்சி எனப் பெயரிடப்பட்டுள்ளது.
4)குற்றால அருவி:
மேற்குத் தொடர்ச்சி மலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது சிற்றாறு, மணிமுத்தாறு, பச்சையாறு, தாமிரபரணி ஆகிய நதிகளின் பிறப்பிடமாகும். குற்றால அருவிக்கரையில் குற்றாலநாதர் சன்னதி உள்ளது. குற்றாலத்தில் பல நீர்வீழ்ச்சிகள் உள்ளதால் அது தென்னிந்தியாவின் ஸ்பா என சிறப்பிக்கப்படுகிறது.
5)ஒகேணக்கல் அருவி:
தர்மபுரி மாவட்டத்தில் காவிரி ஆற்றில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் நயாகரா என அழைக்கப்படுகிறது
6)கிள்ளியூர் நீர்வீழ்ச்சி:
சேலம் மாவட்டம், சேர்வராயன் மலையில் அமைந்துள்ளது. 300 அடி உயரத்திலிருந்து விழும் இந்த நீர்வீழ்ச்சி ஏற்காடு ஏரியிலிருந்து 3.கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
7.கும்பக்கரை அருவி:
தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கு அருகே பழனிமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.
8. குட்லாடம்பட்டி நீர்வீழ்ச்சி:
இது மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டிக்கு அருகே குட்லாடம்பட்டி கிராமத்தில், சிறுமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.
9.குரங்கு அருவி (Monkey falls):
கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறைக்கு அருகில் உள்ள ஆனைமலை தொடரில் அமைந்துள்ளது.
10.பைக்காரா நீர்வீழ்ச்சி:
ஊட்டியிலிருந்து 19 கி.மீ தூரத்தில் பைக்காரா நதியில் அமைந்துள்ளது.
11.செங்குபதி அருவி:
கோயம்புத்தூர் நகரிலிருந்து 35 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.
12.சிறுவாணி நீர்வீழ்ச்சி:
கோயம்புத்தூருக்கு மேற்கில் 37 கி.மீ. தூரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இது கோவை நீகரின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றா விளங்குவதாகும்.
13.சுருளி நீர்வீழ்ச்சி:
தேனி மாவட்டம் உத்தமபாளையத்திலிருந்து 18 கி.மீ. தூரத்திலும், கம்பம் நகரிலிருந்து 8 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. இங்கு கீழ்ச்சுருளி, மேல்சுருளி என இரு இடங்கள் உள்ளன. இந்த நீர்வீழ்ச்சியை உருவாக்கும் சுருளி ஆறு மேகமலைத்தொடரில் உற்பத்தியாகின்றது.
14.திற்பரப்பு நீர்வீழ்ச்சி:
கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரத்திலிருந்து 5கி.மீ தொலைவில் திற்பரப்பு எனும் ஊரில் கோதையாறு திற்பரப்பு நீர்வீழ்ச்சியைத் தோற்றுவிக்கின்றது குமரிக்குற்றாலம் எனவும் இது அழைக்கப்படுகிறது. கோதையாற்றின் குறுக்கே பேச்சிப்பாறை அணை கட்டப்பட்டுள்ளது.
15.உலக்கை அருவி:
கள்னியாகுமரி மாவட்டத்தில் அழகிய பாண்டிபாம் எனும் ஊரில் அமைந்துள்ளது.இந்த அருவித் தண்ணீர் வரும் இடம் பார்ப்பதற்கு ஓர் உலக்கை போலிருப்பதால் இதற்கு உலக்கை அருவி எனும் பெயர் வந்தது
16.வைதேகி நீர்வீழ்ச்சி:
கோவை நகரிலிருந்து 35 கி.மீ. தாலைவில், கோவை மாவட்டத்திற்குள் அமைந்திருக்கிற மற்றோர் அருவி இது.
17.வட்டப்பாறை நீழ் வீழ்ச்சி:
கன்னியாகுமரி மாவட்டத்தில், கீறிப்பாறை ரிசர்வ் காட்டுப் பகுதியிலுள்ள பழையாறை நதியில் வட்டப்பாறை நீர்விீழ்ச்சி அமைந்துள்ளது
காளிகேசம் அருவி:
கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டியிலிருந்து 15கி.மீ தொலைவில் உள்ளது.