இந்தியாவில், மொத்தமுள்ள 17 உயிர்க்கோளக் காப்பகங்களில் மூன்று தமிழகத்தில் அமைந்துள்ளன. அவை,
- நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம்
- மன்னார் வளைகுடாக் கடல் உயிர்க்கோளக் காப்பகம்.
- அகத்தியர் மலை உயிர்க்கோளக் காப்பகம் நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம்.
நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம்:
- இது இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதலாவது உயிர்க்கோளக் காப்பகமாகும். 1986 - ஆம் ஆண்டில் இது உருவாக்கப்பட்டது.
- இது 5520 ச.கி.மீ பரப்பளவு கொண்டது. இதன் மொத்தப் பரப்பளவில் 2537.6 ச.கி.மீ. தமிழ்நாட்டிலும், 1527.4 ச.கி.மீ. கர்நாடகாவிலும், 1455.4 ச.கி.மீ. கேரளாவிலும் அமைந்துள்ளது.
மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகம்:
- தென்கிழக்கு ஆசியாவின் முதலாவது கடல் உயிர்க்கோளக் காப்பகமான இது 1989-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
- இது 10,500 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. பரப்பளவில் இது தமிழ்நாட்டின் மிகப்பெரிய உயிர்க்கோளக் காப்பகமாகவும் இந்தியாவின் இரண்டாவது பெரிய உயிர்க்கோளக் காப்பகமாகவும் விளங்குகிறது(India's second largest biosphere reserve).
- இந்தியாவில் முதலாவது பெரிய உயிர்க்கோளக் காப்பகம் கட்ச் (Rann of Kutch) ஆகும் (India's largest biosphere reserve).
அகத்தியர்மலை உயிர்க்கோளக் காப்பகம்:
- 2001-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இதன் மொத்தப் பரப்பளவு 3,500.36 ச.கி.மீ ஆகும். இதில் 1828 ச.கி.மீ. பகுதி கேரளாவிலும், 1672.36 ச.கி.மீ. பகுதி தமிழகத்திலும் உள்ளது.
- மேற்கண்ட மூன்றில் நீலகிரி, மன்னார் வளைகுடா உயிர்க் கோளக் காப்பகங்கள் மட்டும் யுனெஸ்கோவினால்(UNESCO) அங்கீகரிக்கப்பட்ட உலக உயிர்க் கோளக் காப்பகம் பட்டியலில் அடங்குவனவாகும்.
இந்தியாவில் யுனெஸ்கோவால்(UNESCO)
அங்கீகரிக்கப்பட்ட உயிர்கோள காப்பகங்கள்.
இந்தியாவிலுள்ள 17 உயிர்க்கோளக் காப்பகங்களுள் 7 மட்டும் யுனெஸ்சோன் உலக உயிர்க்கோளக் காப்பகப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. அவை,
- நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம் 2000-ம் ஆண்டு யுனெஸ்கோவினால் (UNESCO) ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகம் 2001-ம் ஆண்டு யுனெஸ்கோவினால் (UNESCO) ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- சுந்தரவனம் உயிர்க்கோளக் காப்பகம் 2001-ம் ஆண்டு யுனெஸ்கோவினால் (UNESCO) ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- நந்தா தேவி உயிர்க்கோளக் காப்பகம் 2004 ஆம் ஆண்டு யுனெஸ்கோவினால் (UNESCO) ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- நாக்ரெக் உயிர்க்கோளக் காப்பகம் 2009 ஆம் ஆண்டு யுனெஸ்கோவினால் (UNESCO) ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- பச்மரி உயிர்க்கோளக் காப்பகம் 2009 ஆம் ஆண்டு யுனெஸ்கோவினால் (UNESCO) ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- சிம்லிபால் உயிர்க்கோளக் காப்பகம்-2009 ஆம் ஆண்டு யுனெஸ்கோவினால் (UNESCO) ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள குளிர்ப்பாலைவனம் (Cold Desen) 2009-ஆண்டு இந்தியாவின் 16-ஆவது உயிர்க்கோளக் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.
- ஆந்திர மாநிலத்தில் உள்ள சேஷாச்சலம் மலைப்பகுதி இந்தியாவின் 17-ஆவது உயிர்க்கோளக் காப்பகமாக 2010 - ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
- அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள திப்ரு - சாய்கோவா உயிர்க்கோளக் காப்பகம், 765 ச.கி.மீ பரப்பளவுள்ள, இந்தியாவின் மிகச்சிறிய உயிர்க்கோளக் காப்பகமாகும்.