- மரபு சார்ந்த ஆற்றல் வளங்கள் பாரம்பரியமாக, மனிதர்களால் தொன்றுதொட்டு பயன்படுத்தப் பெற்று வரும் தொல்லுயிர்ச் சக்திகளான நிலக்கரி, இயற்கை வாயு, பெட்ரோலியம், அணு மின் சக்தி ஆகியவை மரபு சார்ந்த எரிசக்தி வளங்கள்.
முக்கிய மூன்று மரபு சார்ந்த எரிசக்தி வளங்களாவன :
- அனல் மின் சக்தி வளங்கள்
- புனல் (நீர்) மின் சக்தி வளங்கள்
- அணுமின் ஆற்றல் வளங்கள்.
தமிழகத்தில் மின்னாற்றலானது, நீர் காற்று அணு அனல் மின் நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.
தமிழகத்தின் நீர்மின் நிலையங்கள்:
- பைகாரா(நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது.)
- குப்தா(நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது.)
- மோயார் ( நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது.)
- ஆழியார் (கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.)
- பரம்பிக்குளம் (கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.)
- சோலையார் (கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.)
- மேட்டூர் (சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.)
- பாபநாசம் (திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது.)
- கோதையார்(திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது.)
- பெரியார் (மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளது.)
- கருளியார்(தேனி மாவட்டத்தில் அமைந்துள்ளது.)
தமிழகத்தின் முதல் நீர்மின் திட்டம் பைகாரா நீர்மின் திட்டம் ஆகும்.
தமிழகத்தில் அணல் மின் நிலையங்கள்:
- நெய்வேலி (கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது)
- மேட்டூர் (சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.)
- எண்ணூர் (திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.)
- தூத்துக்குடி.
- ஜெயங்கொண்டம் (அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது)
தமிழகத்தின் முதல் அனல் மின் திட்டம் நெய்வேலி அனல் மின் திட்டம் ஆகும்.
தமிழகத்தின் அனு மின் நிலையங்கள்:
- கல்பாக்கம் அணுமின் நிலையம் (காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது)
- கூடங்குளம் அணுமின் நிலையம் (திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது.)
தமிழகத்தின் முதல் அனு மின் நிலையம் கல்பாக்கம் அணுமின் நிலையம் ஆகும்.
Tags:
TNPSC