குளித்ததும் முதலில் முதுகைத் துடைக்க வேண்டும் என்பது ஏன்?



ஆன்மீக விளக்கம்:

குளித்த பின் முதலில் முதுகைக்கான் துடைக்க வேண்டும் என்று கூறுவார்கள்.இதில் நம்பத்தகுந்த சுவாரஸ்யமான  விஷயம் ஒன்று அடங்கியிருக்கின்றது. நம் உடலில் எப்போதும் இரண்டு சூழ்நிலைகள் உள்ளன. நன்மையும் தீமையும் நன்மையென்ற ஸ்ரீதேவியும் தீமையென்ற மூதேவியும். நாம் குளிப்பதற்காக தலையில் நீருற்றும் - போது ஸ்ரீதேவியும் முதேவியும் உடலிலிருந்து வெளியேறுகின்றனர். பின் நமக்குள் போராட்டம் கொண்டிருக்கும். உடலில் யார் முதலில் திரும்ப நுழைய வேண்டும் என்பதற்கே இந்த போராட்டம். உடலில் எந்த பாகத்தில் முதலாவது ஈரம் துடைத்து சுத்தமாகின்றதோ அப்பாகத்தில் மூதேவி நுழைந்து விடுவது வழக்கம். ஏனென்றால் இப்போராட்டத்தில் வெற்றியடைவது தீமையான மூதேவியே. இரண்டாவது முகம் துடைத்தால் அங்கு ஸ்ரீதேவி புகுந்து நாள் முழுவதும் நன்மை விளங்கும் முகத்துடன் வீற்றிருப்பாள். மாறாக முகத்தை முதலில் துடைத்தால் மூதேவி புகுந்த முகத்துடன் நாள் முழுவதும் கழிக்க வேண்டியது தான். அதாவது அன்றைய நாள் அவ்வளவுதான்.அதனால் முதலில் முதுகைத் துடைத்த பின் முகம் துடைக்க வேண்டுமென்ற போதனையை பின் தலைமுறைகளுக்கு அளித்துள்ளனர் முன்னோர்கள்.

இதைக் கேட்டதும் முற்றிலும் மூட நம்பிக்கை என்றெண்ணி தள்ளி விட வேண்டாம். இந்த நம்பிக்கையின் பின்னால் ஒரு மகத்தான அறிவியல் உண்மை அடங்கியிருக்கிறது. 

அறிவியல் பூர்வமான விளக்கம்:

குளிக்கும் போது நம் உடலின் எல்லா பாகங்களிலும் குளிர் பரவுகின்றது (அதாவது உடலின் வெப்பம் குறைகின்றது). மிக அதிகமான குளிர் அனுபவப்படுவது முதுகிலாகும். முதுகெலும்பில் அதிகநேரம் குளிர் ஏற்க வேண்டியது வந்தால் நோய்வாய்ப்பட வாய்ப்புண்டு. இதனால் உண்டாகும் தீங்கைத் தவிர்க்கவே குளித்த உடன் முதுகைத்துடைக்க வேண்டும் என்ற விதிமுறையை வகுத்துள்ளனர் ஆனால் ஒரு வாளி குழாய்த்தண்ணீரில் குளித்து முடிப்பவர்களுக்கு இந்த சாஸ்திரம் பொருந்தாது. பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளிமையாக ஒழுகும் நதியிலோ குளத்திலோ நெடு நேரம் மூழ்கிக் குளிப்பவர்களுக்காக வகுக்கப் பட்ட விதி இது.

இதை நான் ஓலைச்சுவடி என்ற நூலில் படித்தேன்.விருப்பமுள்ளவர்கள் ஓலைச்சுவடி நூலை வாங்கிப் படியுங்கள் மிகவும் அருமையான நூல்.

Post a Comment

Previous Post Next Post