சாலை வசதி வேண்டி விண்ணப்பம்

சாலை வசதி வேண்டி மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்

அனுப்புநர்:

பெயர்,

இடம்,

மாவட்டம்.

பெறுநர்:

மாநகராட்சி ஆணையர் அவர்கள்,

மாநகராட்சி ஆணையர் அலுவலகம்,

இடம்.

மதிப்பிற்குரிய ஐயா,

பொருள்: சாலை வசதி வேண்டி விண்ணப்பம்.

வணக்கம், நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன்.எங்கள் பகுதியில் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.தினசரி அலுவலகத்திற்கு செல்பவர்கள் மற்றும் பள்ளிக்கு செல்பவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.சாலை மிகவும் குண்டும் குழியுமாக இருப்பதால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது.எனவே பழுதடைந்த சாலையை சரி செய்து தருமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி

இப்படிக்கு,

பெயர்.

இடம்:

தேதி:

உறையின் மேல் எழுத வேண்டிய முகவரி:

பெறுநர்:

மாநகராட்சி ஆணையர் அவர்கள்,

மாநகராட்சி ஆணையர் அலுவலகம்,

இடம்.

 Related: சாலை வசதி வேண்டி மாவட்ட ஆட்சியருக்கு கடிதம்

4 Comments

Previous Post Next Post