குறுகிய வடிவமும் பெருகிய தவ வலிமையும் கொண்ட முனிவர். சந்திர வம்ச மன்னனான நகுஷனைப் பாம்பாகப் போகும்படி சபித்தவர்.
அங்கார பர்ணன்:
அர்ஜுனனுடன் போர் புரிந்து தோற்ற கந்தர்வன்.
அசுவத்தாமன்:
துரோணாச்சாரியாரின் மகன்.
அதிரதன்:
கர்ணனின் வளர்ப்புத் தந்தை.
அபிமன்யு:
அர்ஜுனனுக்கும் சுபத்திரைக்கும் பிறந்தவன். விராட மன்னன் மகள் உத்தரையை மணந்தவன்.
அரவான்:
அர்ஜுனனுக்கும் நாக மங்கை உலூபிக்கும் பிறந்தவன். பாண்டவர்களுக்காகக் களப்பலியானவன்.
அருந்ததி:
புகழ்மிக்க பதிவிரதையரில் ஒருத்தி. வசிஷ்ட மகரிஷியின் மனைவி.
அம்பாலிகை:
காசிராஜனின் மூன்றாவது புதல்வி. விசித்திரவீரியனின் மனைவி. பாண்டுவை ஈன்றவள்.
அம்பிகை:
காசிராஜனின் இரண்டாவது புத்திரி. விசித் திரவீரியனின் மனைவி. திருதராஷ்டிரனைப் பெற்றெடுத்தவள்.
அம்பை:
காசிராஜனின் மூத்த புதல்வி. பீஷ்மரிடம் விரோதம் பூண்டவள். சிகண்டியாக மறுஜென்மம் கொண்டவள்.
அர்ஜுனன்:
பாண்டவர்கள் ஐவரில் மூன்றாமவன். இந்திரனின் அனுக்கிரஹத்தால் குந்திக்குப் பிறந்தவன்.
அலாயுதன்:
இரவுப் போரில் கடோத்கஜனுக்கு எதிராகக் கௌரவர்களால் களமிறக்கப்பட்ட அரக்கன்.
இடும்பன்:
ஓர் அரக்கன். பீமனால் மாய்க்கப்பட்டவன்.
இடும்பி:
ஓர் அரக்கி. இடும்பனின் சகோதரி. பீமனால் மணக்கப்பட்டவள். கடோத்கஜனின் தாய்.
இந்திரன்:
தேவலோக வேந்தன்.
இந்திராணி:
இந்திரனின் மனைவி (சசிதேவி).
உக்ரசேனர்:
கம்சனின் தந்தை.
உத்தரை:
விராட வேந்தனின் மகள். அபிமன்யுவுக்கு மனைவி.
உத்தரன்:
விராட வேந்தனின் மகன்.
ஊர்வசி:
தேவலோக மங்கையரில் ஒருத்தி.
ஏகலைவன்:
குரு பக்தியில் சிறந்த வில்லாற்றலில் மேம்பட்ட வேட்டுவ இளைஞன். இவனது வலக்கைக் கட்டை விரலைக் குருதட்சிணையாகத் துரோணர் கேட்டு வாங்கினார்.
கசன்:
தேவகுருவான பிருஹஸ்பதியின் மகன். சுக்கிராச்சாரியாரிடம் மாணவனாக இருந்தவன். சுக்கிரர் மகள் தேவயானியின் காதலுக்குப் பாத்திரமானவன்.
கங்கன்:
அஞ்ஞாதவாசத்தின்போது தரும புத்திரனின் பெயர்.
கடோத்கஜன்:
பீமனுக்கும் இடும்பி என்ற ராட்சஸிக்கும் பிறந்தவன்.
கண்ணன்:
பாண்டவர்களின் மைத்துனன். கண்ண னின் தந்தை வசுதேவரும் பாண்டவர்களின் தாய் குந்தி யும் சகோதர சகோதரிகள்.
கந்தர்வர்கள்:
தேவர்களில் ஒரு பிரிவினர். மிக்க இசைத்திறமை வாய்ந்தவர்கள்.
கம்சன்:
கண்ணனின் தாய்மாமன். கண்ணனால் வதைக்கப்பட்ட கொடூரன்.
கர்ணன்:
திருமணத்திற்கு முன்பே குந்தியின் வயிற்றில் சூரிய பகவானின் அருளால் உதித்தவன். துரியோதனனின் நண்பன்.
கிந்தமர்:
பாண்டுவுக்குச் சாபம் கொடுத்த முனிவர்.
கிருபர்:
பாண்டவர்களின் ஆரம்பக் கல்வியாசிரியர்.
கிருபி:
கிருபரின் சகோதரி. துரோணாச்சாரியாரின் மனைவி.
கிருதவர்மன்:
யாதவ தலைவர்களுள் ஒருவன். கௌரவர் தரப்புக்காகப் போரிட்டவன்,
கிருதாசி:
அப்சரப் பெண்களில் ஒருத்தி. பரத்வாஜ முனிவரிடத்துத் துரோணர் தோன்றக் காரணமானவள்.
காந்தாரி:
திருதராஷ்டிரனின் மனைவி. சகுனியின் சகோதரி. கணவன் பார்வையில்லாதவன் என்பதால், தன் கண்களை மறைத்துக் கட்டிக் கொண்டு, தானும் பார்வையில்லாதவள் போல் ஆனவள்.
கீசகன்(கீட்சகன்):
விராட மன்னனின் மைத்துனன். திரௌபதியிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றவன்.
குந்தி:
பாண்டவர்களின் தாய். பிருதா என்றும் அழைக்கப்பட்டவள். கண்ணனுக்கு அத்தை.
கௌசவி:
துருபதனின் மனைவி.
கௌரவர்கள்:
திருதராஷ்டிரனின் நூறு பிள்ளைகள்.
சகதேவன்:
மகத தேசாதிபதியான ஜராசந்தனின் மகன். யுத்தத்தில் பாண்டவர்களின் படைத் தளபதிகளுள் ஒருவனாக இருந்தவன்.
சகாதேவன்:
பாண்டவர்கள் ஐவரில் இளையவன். பாண்டுவின் இரண்டாவது மனைவி மாத்திரிக்கு அஸ்வினி தேவர்களின் அருளால் பிறந்தவன்.
சகுனி:
காந்தாரியின் சகோதரன். கௌரவர்களின் தாய்மாமன்.
சஞ்சயன்:
திருதராஷ்டிரனின் அமைச்சர்களில் ஒருவன். போர்க்கள நிகழ்வுகளைத் திருதராஷ்டிரனுக்கு எடுத்துரைத்தவன்.
சந்தனு:
சந்திர வம்ச வேந்தனான பிரதீபனின் மகன். பீஷ்மருக்குத் தந்தை.
சத்தியபாமா:
கிருஷ்ணரின் மனைவி
சத்தியஜித்:
பாஞ்சால வீரர்களில் ஒருவன். குருக்ஷேத்திர யுத்தத்தில் தருமனைப் பாதுகாத்து உயிர்விட்டவன்.
சத்தியவதி:
சந்தனு வேந்தனின் இரண்டாம் தாரம். சித்திராங்கதன், விசித்திர வீரியன் என்னும் இருவரின் தாய். கன்னிகையாயிருந்த போது பராசர முனிவரோடு கலந்து வியாசரை ஈன்றெடுத்தவள்.
சரத்வான்:
ஒரு முனிவர். கிருபருக்கும் கிருபிக்கும் தந்தை.
சர்மிஷ்டை:
அசுரவேந்தன் விருஷ பர்வனின் மகள். தேவயானியின் தாதியாகி, அவளுடைய கணவன் யயாதி யுடன் ரகசிய உறவு வைத்திருந்தவள். யயாதிக்குத் தன் இளமையைக் கொடுத்தவனான பூருவைப் பெற்றெடுத்தவள்.
சாத்யகி:
யாதவ தலைவர்களில் ஒருவன். கண்ணனின் நண்பன். யுத்தத்தில் பாண்டவர் தரப்பில் இடம் பெற்றவன்.
சாம்பன்:
கண்ணனின் மகன்களில் ஒருவன். ஜாம்பவதி இவன் தாய்.
சால்வன் 1:(சால்வன் என்னும் பெயரில் இருவர் உள்ளனர்)
சௌபாலம் என்னும் தேசத்தின் அரசன். அம்பையின் காதலன். பீஷ்மரால் அம்பை தூக்கிச் செல்லப் பட்டபின் அந்த அம்பையின் காதலை நிராகரித்தவன்.
சால்வன் 2:
சிசுபாலனின் நண்பன். கண்ணனை எதிர்த்தவன். அந்தக் கண்ணனால் மாய்க்கப்பட்டவன்.
சிகண்டி:
பீஷ்மரைப் பழி வாங்கத் துடித்த அம்பையின் மறுபிறப்பு. துருபத வேந்தனுக்குப் பெண்ணாகப் பிறந்து, பின் ஆணாக மாறியவன். குருக்ஷேத்திர யுத்தத்தில் பீஷ்மர் சாய்க்கப்படுவதற்குக் காரணமாயிருந்தவன்.
சிசுபாலன்:
சேதி தேசத்து வேந்தன். ராஜசூய யாகத் தின்போது கண்ணனால் மாய்க்கப்பட்டவன்.
சித்திராங்கதன்:
சந்தனு வேந்தனுக்கும் சத்தியவதிக் கும் பிறந்த முதல் மகன். ஒரு கந்தர்வனால் கொல்லப் பட்டு அற்ப ஆயுளில் மடிந்தவன். பீஷ்மரின் சகோதரன்.
சித்ராங்கதை:
பாண்டிய வேந்தனின் மகள். அல்லி ராணி என்று அறியப்பட்டவள். அர்ஜுனனின் மனைவியரில் ஒருத்தி. பப்ருவாகனனின் தாய்.
சுக்கிராச்சாரியார்:
அசுரர்களின் குரு. சுசர்மன் - திரிகர்த்த நாட்டு மன்னன். யுத்தத்தில் கௌரவர்களின் தரப்பில் இருந்தவன்.
சுதட்சிணன்:
கௌரவர்களின் படைத் தளபதிகளுள் ஒருவன்.
சுதேட்சணை:
விராட மன்னனின் பட்டத்தரசி.
சுபத்திரை:
கண்ணனின் தங்கை. அர்ஜுனனின் தாரம். அபிமன்யுவின் தாய்.
சுவலன்:
சகுனியின் தந்தை.
சூரசேனர்:
வசுதேவரின் தந்தை. கண்ணனின் பாட்டன்.
சைரந்திரி:
அஞ்ஞாத வாசத்தின்போது திரௌபதியின் பெயர்.
தந்திரிபாலன்:
அஞ்ஞாத வாசத்தின்போது சகாதேவன் ஏற்றிருந்த பெயர்.
தர்மதேவன்(யமன்):
இவரது அருளால்தான் குந்தி தேவியிடத்து யுதிஷ்டிரன் தோன்றினான். நச்சுப் பொய்கையினருகில் யுதிஷ்டிரனைச் சோதித்தவன்.
தாமக்ரந்தி:
அஞ்ஞாத வாசத்தின்போது நகுலன் ஏற்றிருந்த நாமம்.
திருஷ்டத்யும்னன்:
துருபத வேந்தனின் மகன். வேள்வி நெருப்பில் உதித்தவன். திரௌபதியின் அண்ணன். துரோணரைக் கொன்றவன்.
திருஷ்டகேது:
பாண்டவர்களின் படைத் தளபதிகளுள் ஒருவன்.
திருதராஷ்டிரன்:
விசித்திரவீரியனின் மனைவியான அம்பிகையிடத்து வியாசரால் கருவாகிப் பிறந்தவன். பிறவிக் குருடன். கௌரவர்களின் தந்தை. பாண்டுவின் அண்ணன்.
திரௌபதி:
துருபத மன்னனின் மகள். வேள்வி நெருப்பில் தோன்றியவள். பாண்டவர்களின் மனைவி.
துச்சாதனன்:
கௌரவர்களில் இரண்டாமவன். திரௌபதியின் துகிலுரிந்தவன்.
துருபதன்:
பாஞ்சால தேசத்து வேந்தன். சிகண்டி, திருஷ்டத்யும்னன், திரௌபதி ஆகிய மூவருக்கும் தந்தை.
துரியோதனன்:
கௌரவர்களில் மூத்தவன். தந்தை திருதராஷ்டிரனின் தலைமையின்கீழ் அஸ்தினாபுரியில் அரசிருந்தவன்.
துரோணர்:
குரு வம்சத்து ராஜகுமாரர்களின் ஆசிரியர். கிருபரின் சகோதரியான கிருபியை மணந்தவர். அசுவத்தாமனின் தந்தை.
துர்வாசர்:
கோபம் மிக்க முனிவர். குந்தி தேவிக்குச் சந்தான பாக்கிய மந்திரத்தைக் கொடுத்தவர்.
தேவகி:
கிருஷ்ணனின் தாய். வசுதேவரின் மனைவி.
தேவயானி:
அசுர குரு சுக்கிராச்சாரியாரின் மகள்.
தேவ விரதன்:
பீஷ்மரின் இயற்பெயர்.
தௌமியர்:
பாண்டவர்களின் குருவாக இருந்து வழி காட்டிய ரிஷி.
நகுலன்:
பாண்டவர்கள் ஐவரில் நாலாமவன். பாண்டு வின் இரண்டாவது மனைவி மாத்திரிக்கு அஸ்வினி தேவர் களின் அருளால் பிறந்தவன்.
நகுஷன்:
சந்திரவம்ச வேந்தர்களுள் ஒருவன். அகத்தியரின் சாபத்தால் பாம்பானவன்.
நளாயினி:
புகழ்பெற்ற பதிவிரதையரில் ஒருத்தி. மௌட்கல்ய முனிவரின் மனைவி. இவளே மறுபிறப்பில் திரௌபதியாகத் தோன்றுகிறாள்.
நாரதர்:
திரிலோக சஞ்சாரியான மகரிஷி.
பகதத்தன்:
ப்ராக்ஜோதிஷ நகர வேந்தன். யுத்தத்தில் கௌரவர் பக்கம் இருந்தவன்.
பகாசுரன்:
ஏக சக்கர நகரில் பீமனால் கொல்லப்பட்ட அரக்கன்.
பப்ருவாகனன்:
அர்ஜுனனுக்கும் சித்திராங்கதை என்னும் அல்லிராணிக்கும் பிறந்தவன்.
பலராமன்:
கண்ணனின் அண்ணன்.
பரசுராமர்:
ஷத்திரியர்கள் மீது வெறுப்புக் கொண்டிருந்த பிராமணர். பீஷ்மர், துரோணர், கர்ணன் ஆகியோருக்குக் குரு.
பரதன்:
துஷ்யந்தனுக்கும் சகுந்தலைக்கும் பிறந்தவன்.
பரத்வாஜர்:
ஒரு முனிவர். துரோணரின் தந்தை.
பராசரர்:
வியாசரின் தந்தை.
பரீட்சித்:
அபிமன்யுவுக்கும் உத்தரைக்கும் பிறந்தவன். பாண்டவர்களின் பேரன்.
பர்பரிகன்:
கடோத்கஜனின் மகன். தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பாரதப் போரைப் பார்த்துக் கொண்டிருந்தவன்.
பாகுலிகன்:
கௌரவர்களின் படைத் தளபதிகளுள் ஒருவன்.
பாண்டவர்கள்:
பாண்டு மன்னனின் ஐந்து புதல்வர்கள் (யுதிஷ்டிரன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன்).
பாண்டு:
விசித்திர வீரியனின் மனைவியான அம்பாலிகையிடத்து வியாசரால் கருவாகிப் பிறந்தவன். வெளுத்துப்போன உடலுடையவன். பாண்டவர்களின் தந்தை. திருதராஷ்டிரனின் தம்பி.
பானுமதி:
துரியோதனன் மனைவி. கலிங்க நாட்டு இளவரசி.
பிரத்யும்னன்:
கண்ணனின் மகன். ருக்மிணி இவன் தாய்.
பிரமிளாதேவி:
கௌரி வனத்திற்குள் இருந்த நாரீபுரத் தின் ராணி. அர்ஜுனனின் மனைவியரில் ஒருத்தி.
பிருகதஸ்வரர்:
வனவாசத்திலிருந்த பாண்டவர்களுக்கு ஆறுதலும் அறிவுபதேசங்களும் வழங்கிய ஒரு முனிவர்.
பிருகத்ரதன்:
ஜராசந்தனின் தாய்.
பிருகன்னளை:
அஞ்ஞாதவாசத்தின் போது அர்ச்சுனனின் பெயர்.
பிரஹஸ்பதி:
தேவர்களின் குரு.
பீமன்:
பாண்டவர்கள் ஐவரில் இரண்டாமவன், பாண்டுவின் முதல் மனைவி குந்திக்கு வாயுதேவனின் அருளால் பிறந்தவன்.
பீஷ்மர்:
சந்தனு வேந்தனுக்கும் கங்கா தேவிக்கும் பிறந்தவர். தந்தையின் இன்ப வாழ்வுக்காக, பிரம்மச்சாரியாக இருப்பேன்' என்று சபதம் ஏற்றவர். பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் பாட்டனார்.
புரோசனன்:
அரக்கு மாளிகையில் பாண்டவர்களைக் கொல்வதற்கென்று துரியோதனனால் நியமிக்கப்பட்டிருந்த பணியாள்.
பூரிசிரவசு:
யுத்தத்தில் கௌரவர் பக்கமிருந்த வீரன்.
மாயன்:
இந்திரப் பிரஸ்தத்தில் பாண்டவர்களுக்கு மாளிகை ஏற்படுத்திக் கொடுத்த அசுரத் தச்சன்.
மாண்டவ்யர்:
தவறாகக் கழுவில் ஏற்றப்பட்டவர். யமனை மனிதனாகப் பிறக்கும்படி சபித்தவர். நளாயினிக்குச் சாபமிட்டவரும் இவரே.
மாதலி:
இந்திரனின் தேரோட்டி. அர்ஜுனனைத் தேவலோகத்திற்கு அழைத்துச் சென்றவன்.
மாத்திரி:
பாண்டுவின் இரண்டாவது மனைவி. நகுல சகாதேவர்களின் தாய். சல்லியனின் சகோதரி.
மார்க்கண்டேயர்:
வனவாசத்தின்போது பாண்டவர்களுக்குக் கதைகள் சொன்ன முனிவர்.
மைத்ரேயர்:
நியாயமாக நடந்து கொள்ளும்படி துரியோதனனை எச்சரித்த மகரிஷி.
மௌட்கல்யர்:
பதிவிரதை நளாயினியின் கணவர். யசோதை - கண்ணனின் வளர்ப்புத் தாய். யயாதி - சந்திரவம்ச வேந்தர்களில் ஒருவன். தேவ யானி, சர்மிஷ்டை ஆகியோரின் கணவன்.
யுதிஷ்டிரன்:
பாண்டவர் ஐவரில் மூத்தவன். பாண்டு வின் முதல் மனைவியான குந்தியிடம் தர்மதேவனின் அருளால் தோன்றியவன்.
யுயுத்சு:
திருதராஷ்டிரனுக்கும் ஒரு பணிப் பெண்ணுக்கும் பிறந்தவன். துரியோதனுடைய அதர்மப் போக்கை எப்போதும் ஆட்சேபித்து வந்தவன். யுத்தத்தில் பாண்டவர் பக்கம் இணைந்து கொண்டவன்.
கௌரி வனம்:
உள்ளே நுழையும் ஆண்களையெல்லாம் பெண்களாக மாற்றும் அதிசயவனம்.
சேதி நாடு:
சிசுபாலன் ஆண்ட தேசம்.
துவாரகை:
கண்ணன் ஆட்சிபுரிந்த தீவு.
துவைத வனம்:
வனவாசத்தின்போது பாண்டவர்கள் தங்கியிருந்த இடங்களில் ஒன்று.
பத்ரீ ஆஷ்ரமம்:
வனவாசத்தின்போது தீர்த்த யாத்திரை மேற்கொண்ட பாண்டவர்கள் சில நாட்கள் தங்கியிருந்த மிக ரம்மியமான இடம்.
பாஞ்சாலம்:
துருபத வேந்தன் ஆண்ட தேசம்.
பிரமாணகோடி:
பால்ய காலத்தில் பீமனுக்குத் துரியோதனன் நஞ்சு ஊட்டிய இடம்.
மகத தேசம்:
ஜராசந்தன் ஆண்ட நாடு.
மதுராபுரி:
கம்சனாலும் பிறகு கண்ணனாலும் ஆளப்பட்டு, அதன்பின்பு ஜராசந்தனால் எரியூட்டப்பட்ட நகரம்.
மேரு:
விண்ணுலகிற்கும் மண்ணுலகிற்கும் இணைப் புப் பாலமாக உள்ள மலை. இதன் வழியே ஏறித் தரும புத்திரன் சொர்க்கம் சென்று சேர்ந்தான்.
ரைவத பர்வதம்:
துவாரகை நகருக்கு வெளியே இருந்த மலை.
வாரணாவதம்:
பாண்டவர்களை ஒழிக்கத் துரியோதனனால் அரக்கு மாளிகை எழுப்பப்பட்ட நகரம்.
விசாகயூபம்:
பாண்டவர்கள் வனவாசத்தின் போது வசித்திருந்த இடங்களில் ஒன்று.
விராட நாடு:
பாண்டவர்கள் அஞ்ஞாத வாசம் செய்த இடம். மத்ஸ்ய தேசம் என்பது இதன் பெயர். விராடன் என்பவன் ஆண்டதால் விராட நாடு.
ராதை 1:(ராதை என்னும் பெயரில் இருவர் இருந்தனர்)
கர்ணனின் வளர்ப்புத் தாய். தேரோட்டி அதிரதனின் மனைவி.
ராதை 2:
கண்ணனை மிகத் தீவிரமாகக் காதலித்த கோபியரில் ஒருத்தி.
ருக்மிணி:
கண்ணனின் மனைவி.
ருக்மி:
ருக்மிணியின் சகோதரன்.
ரேவதன்:
துவாரகையை ஆண்டவன்.
ரேவதி:
ரேவதனின் மகள், பலராமனின் மனைவி.
லஷ்மணான்:
துரியோதனனின் மகன். லஷ்மணை துரியோதனனின் மகள். சாம்பனின் மனைவி.
லோமசர்:
அமராவதியில் அர்ஜுனன் நலமாயிருக்கிறான் என்பதை இதர பாண்டவர்களுக்கு எடுத்துரைப் பதற்காக இந்திரனால் அனுப்பி வைக்கப்பட்ட முனிவர்.
வசிஷ்டர்:
அஷ்ட வசுக்களில் எட்டாவது வசு பூமியில் மானுடனாகப் பிறக்கும்படி சபித்த மகரிஷி.
வத்ஸலா:
பலராமனின் மகள்.
வல்லாளன்:
அஞ்ஞாதவாசத்தின்போது பீமன் ஏற்றிருந்த பெயர்.
வஜ்ரன்:
கண்ணனின் மகனான பிரத்யும்னனின் பேரன்.
விகர்ணன்:
கௌரவர்கள் நூறு பேரில் ஒருவன். நியாயத்திற்காகக் குரல் கொடுத்தவன்.
விசித்திரவீரியன்:
சந்தனு வேந்தனுக்கும் சத்திய வதிக்கும் பிறந்த இரண்டாம் மகன்.அம்பிகை, அம்பாலிகை ஆகிய இருவரையும் மணந்தவன். நோய் வந்து இளமையிலேயே மடிந்தவன். பீஷ்மரின் சகோதரன்.
விதுரர்:
திருதராஷ்டிரனுக்கும் பாண்டுவுக்கும் தம்பி. வியாச முனிவரால் ஒரு வேலைக்காரியின் கருவில் தோன்றியவர்.
விராடன்
மத்ஸ்ய தேசத்து மன்னன். அஞ்ஞாத வாசத்தின்போது பாண்டவர்கள் இவனது நாட்டில்தான் தலைமறைவு வாழ்க்கை நடத்தினர்.
விருத்த ஷத்திரன்:
ஜயத்ரதனின் தந்தை. தாம் வாங்கியிருந்த வரம், தமக்கே கேடாகப் போகும்படியான நிலைக்கு உள்ளானவர்.
வியாசர்:
பராசர முனிவரின் மைந்தர். மஹாபார தத்தை இயற்றிய கர்த்தா.
வைசம்பாயனர்:
ஜனமேஜயனுக்கு மஹாபாரதத்தை எடுத்துரைத்தவர்.
ஜயத்ரதன்:
சிந்து தேச மன்னவன். கௌரவர்களின் ஒரே சகோதரியான துச்சளையை மணந்தவன்.
ஜராசந்தன்:
கண்ணனின் விரோதி.
ஜனமேஜயன்:
பரீட்சித்தின் மகன்.
ஜாலவதி:
அப்சரப் பெண்களில் ஒருத்தி. சரத்வான் என்ற முனிவரின் தவத்தைக் கலைத்து, கிருபர் - கிருபி பிறப்புக்குக் காரணமானவள்.