தமிழக ஏரிகள் மற்றும் நீர்த்தேக்கங்கள்

தமிழக ஏரிகள் மற்றும் நீர்த்தேக்கங்கள்


அமராவதி நீர்த்தேக்கம்:

காமராஜர் ஆட்சிக்காலத்தில், 1957-ஆம் ஆண்டு அமராவதி ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டு இது  உருவாக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில்,அமராவதி நகர் என்ற இடத்தில் உள்ள இந்திராகாந்தி வனவிலங்கு காப்பகம் மற்றும் தேசியப்பூங்காவில்அமைந்துள்ளது.

இங்கு தென்னிந்தியாவின் இயற்கைச் சூழலில் வளர்க்கப்படும் மிகப்பெரிய முதலைப்பண்ணை அமைந்துள்ளது. இதில் சேற்று முதலைகள் அல்லது பாரசீக என்று அழைக்கப்படும் முக்கர் முதலைகள் (Mugger Crocodiles) வளர்க்கப்படுகின்றன.

அம்பத்தூர் ஏரி :

சென்னையின் அம்பத்தூர் பகுதியில் அமைந்துள்ள மழைநீர் ஏரி. சென்னை மாநகரின் குடிநீர்த் தேவைகளை நிறைவு செய்யும் ஏரிகளுள் இதுவும் ஒன்று.

செம்பரம்பாக்கம் ஏரி:

சென்னையிலிருந்து 40 கி.மீ. தொலைவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சென்னை நகரின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளில் ஒன்றாகும். இந்த ஏரியிலிருந்துதான் அடையாறு நதி தோன்றுகிறது

கழிவேலி ஏரி:

பாண்டிச்சேரியிலிருந்து 16 கி.மீ தொலைவில் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இடம்பெயர்ந்து வரும் பறவைகளுக்கான முக்கிய இனப்பொெருக்கு இடமாக இது விளங்குகிறது.

காமராஜ சாகர் நீர்த்தேக்கம் / ஏரி:

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது

கொடைக்கானல் ஏரி:

1863-ஆம் ஆண்டு கொடைக்கானல் நகரில் உருவாக்கப்பட்ட ஏரி இது அப்போதைய மதுரை கலெக்டராக இருந்த சர் வீர் ஹென்றி லெவிஞ்ச் என்பவரே இந்த ஏரியை உருவாக்குவதற்கு முக்கிய காரணகர்த்தா ஆவார். இப்போதைய திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக உள்ளது.

பேரிஜம் ஏரி:

இதுவும் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலாத் தலமாகும்

ஊட்டி ஏரி:

ஊளட்டியின் முதல் கலெக்டரான ஜான் சல்லிவன் என்பவர் இந்த ஏரியை 1824-ஆம் ஆண்டு உருவாக்கினார். இங்கு 1973 முதல் படகுப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

போரூர் ஏரி:

உள்ளூர் மக்களால் 'ரெட்டேரி' என அழைக்கப்படும் இந்த ஏரி சென்னை நகரின் தென்மேற்குப் பகுதியில் போரூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது. சென்னையின் குடிநீர் ஆதாரங்களுள் இதுவும் ஒன்று. கடலூர் மாவட்டம், வீரநாராயணபுர ஏரியில் இருந்து குழாய் மூலம் கொண்டு வரப்படும் நீர் இங்கு இருப்பு வைக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.

பழவேற்காடு ஏரி:

இது ஆங்கிலத்தில் புலிக்கட் ஏரி (Pulicat lake) என்று அழைக்கப்படுகிறது இது தமிழக ஆந்திர எல்லையில் சோழமண்டலக் கடற்கரையில் அமைந்துள்ள உவர்நீர் ஆகும்.

காயல் (Lagoon): 

இது இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்புநீர் ஏரி. இது ஸ்ரீஹரிகோட்டா தீவினால் வங்காள விரிகுடாவிலிருந்து பிரிக்கப்படுகிறது. இங்கு ஒரு பறவைகள் காப்பகமும் அமைந்துள்ளது.

புழல் ஏரி:

புழல் ஏரி அல்லது செங்குன்றம் ஏரி எனப்படும் இது திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மழைநீர்ப்பிடிப்பு மூலமும், பூண்டி நீர்த்தேக்கம் மூலமும் இந்த ஏரிக்கு நீர்வருகிறது. சென்னைக்குக் குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளுள் ஒன்று இது

சோழவரம் ஏரி:

சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் இந்த ஏரி திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

சிங்காநல்லூர் ஏரி:

கோயம்புத்தூர் நகரில் அமைந்துள்ள பெரிய ஏரிகளுள் இதுவும் ஒன்று வாலாங்குளம் ஏரி கோயம்புத்தூரிலுள்ள மற்றோர் ஏரியான இதற்கு நொய்யல் ஆறு நீர் ஆதாரமாகும்.

வீர நாராயணபுர ஏரி:

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரத்திற்கு அருகே அமைந்துள்ளது. இது சோழர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட ஓர் ஏரியாகும். இந்த ஏரியிலிருந்து சென்னை நகருக்கு குடிநீர் வழங்குவதற்கான “வீராணம் திட்டம்” 1967-ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வர் சி.என்.அண்ணாதுரையால் வகுக்கப்பட்டது. அவரைத் தொடர்ந்து வந்த முதல்வர் கருணாநிதியால் இது செயல்படுத்தப்பட்டது.

வேளச்சேரி ஏரி:

சென்னை நகருக்குள் அமைந்திருக்கும் ஏரிகளில் இதுவும் ஒன்றாகும். 

காவேரிப்பாக்கம்:

வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரி வாலாஜாவை அடுத்து அமைந்துள்ளது.

தெரிந்து கொள்வோம்:

  • தமிழ்நாட்டின் மிகப் பழமையான அணை கல்லணை.
  • தமிழ்நாட்டின் மிகப் பெரிய அணை மேட்டூர் அணை.
  • தமிழ்நாட்டின் மிக ஆழமான அணை சோலையாறு அணை
  • தமிழ்நாட்டின் நீளமான ஆறு காவிரி.

Post a Comment

Previous Post Next Post