- மாபெரும் கணித மேதையான சீனிவாச இராமானுஜன், டிசம்பர் 22, 1887 இல் ஈரோட்டில் பிறந்தார்.
- 3000-க்கும் மேற்பட்ட கணிதத் தேற்றங்களை 1914 முதல் 1918 வரையிலான காலத்தில் இவர் கண்டுபிடித்தார்.
- லண்டன் ராயல் சொசைட்டியின் உறுப்பினராக 1918-ஆம் ஆண்டில் ஆனார்.
இராமானுஜனின் ஆய்வுகளில் மிகச்சிறந்தவையாகக் கருதப்படுபவை:
- சமன்பாடுகளின் கொள்கை (Theory of Equations).
- எண்களின் கொள்கை (Theory of Numbers).
- நிச்சயமான தொகையீடுகள் (Definite Integrals).
- பங்கீடுகளின் கொள்கை (Theory of Partitions).
- நீள்வளையச் சார்புகளும் தொடர்ச்சியான பின்னங்களும் (Elliptic Functions and Continued Fractions).
- இவருடைய ‘மாக் தீட்டா ஃபங்ஷன்ஸ்' எனும் ஆராய்ச்சி முடிவுகள் மிகவும் சிறப்பானவையாகும்.
- இவர் தமது 33-ஆவது வயதில், 1920, ஏப்ரல் 26 - அன்று காலமானார்.
- இவரது மறைவிற்குப் பிறகு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் இவருடைய ஆய்வுக் கட்டுரைகள் அனைத்தையும் தொகுத்துப் புத்தகமாக வெளியிட்டுள்ளது.
- தமிழக அரசு இவருடைய பிறந்தநாளை (டிசம்பர் 22 ஆம் தேதி) மாநில தகவல் தொழில்நுட்ப தினமாகக் கொண்டாடுகிறது.
- இந்திய அரசு இவரது நினைவு அஞ்சல் தலையை 1962-ஆம் ஆண்டு வெளியிட்டது.
- இராமானுஜனின் 125-ஆவது பிறந்த நாள் விழா 2011-ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. இவரது பிறந்த நாளான டிசம்பர் 22, இனி தேசிய கணித நாளாகக் கொண்டாடப்படுமென அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்தார்.
Tags:
TNPSC