சீனிவாச இராமானுஜன்



  • மாபெரும் கணித மேதையான சீனிவாச இராமானுஜன், டிசம்பர் 22, 1887 இல் ஈரோட்டில் பிறந்தார்.
  • 3000-க்கும் மேற்பட்ட கணிதத் தேற்றங்களை 1914 முதல் 1918 வரையிலான காலத்தில் இவர் கண்டுபிடித்தார்.
  • லண்டன் ராயல் சொசைட்டியின் உறுப்பினராக 1918-ஆம் ஆண்டில் ஆனார்.
இராமானுஜனின் ஆய்வுகளில் மிகச்சிறந்தவையாகக் கருதப்படுபவை:

  1. சமன்பாடுகளின் கொள்கை (Theory of Equations).
  2. எண்களின் கொள்கை (Theory of Numbers).
  3. நிச்சயமான தொகையீடுகள் (Definite Integrals).
  4. பங்கீடுகளின் கொள்கை (Theory of Partitions).
  5. நீள்வளையச் சார்புகளும் தொடர்ச்சியான பின்னங்களும் (Elliptic Functions and Continued Fractions).
  • இவருடைய ‘மாக் தீட்டா ஃபங்ஷன்ஸ்' எனும் ஆராய்ச்சி முடிவுகள் மிகவும் சிறப்பானவையாகும். 
  • இவர் தமது 33-ஆவது வயதில், 1920, ஏப்ரல் 26 - அன்று காலமானார்.
  • இவரது மறைவிற்குப் பிறகு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் இவருடைய ஆய்வுக் கட்டுரைகள் அனைத்தையும் தொகுத்துப் புத்தகமாக வெளியிட்டுள்ளது. 
  • தமிழக அரசு இவருடைய பிறந்தநாளை (டிசம்பர் 22 ஆம் தேதி) மாநில தகவல் தொழில்நுட்ப தினமாகக் கொண்டாடுகிறது. 
  • இந்திய அரசு இவரது நினைவு அஞ்சல் தலையை 1962-ஆம் ஆண்டு வெளியிட்டது.
  • இராமானுஜனின் 125-ஆவது பிறந்த நாள் விழா 2011-ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. இவரது பிறந்த நாளான டிசம்பர் 22, இனி தேசிய கணித நாளாகக் கொண்டாடப்படுமென அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post