புதிய கற்காலம்


  • மனித நாகரீகத்தின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை புதிய கற்காலத்தில் தான் காணமுடிகிறது.
  • புதிய கற்காலம் சுமார் கி.மு.6000 முதல் கி.மு 4000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலமாகும்.
  • இந்தியாவின் பல பகுதிகளில் புதிய கற்காலப் பொருட்கள் கிடைத்துள்ளன.
  • காஷ்மீர் பள்ளத்தாக்கு, பீகாரில் சிராண்ட் உத்திரப்பிரதேசத்தில் பிலான் சமவெளி, தக்காணத்தில் பல இடங்கள் ஆகியனவும் இதிலடங்கும்.
தென்னிந்தியாவில் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ள இடங்களாவன:

கர்நாடகத்தில் மாஸ்கி, பிரம்மகிரி, ஹல்லூர், கோடேகல், தமிழ்நாட்டில் பையம்பள்ளி, ஆந்திரப்பிரதேசத்தில்
உட்னூர் ஆகிய இடங்கள் அவற்றில் குறிப்பிடத்தக்கவை.  

தமிழகத்தில் புதிய கற்கால மண் பாண்டங்கள் கிடைத்துள்ள இடங்கள் திருநெல்வேலி, சேலம், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி. தான்றிக்குடி. 

  • வேளாண்மை, விலங்குகளை வளர்த்தல், கற்கருவிளை பளபளப்பாக்குதல், மட்பாண்டம் செய்தல் போன்றவை புதிய கற்கால பண்பாட்டின் சிறப்புக் கூறுகளாகும்.
  • தாவரங்களைப் பயிரிடத் தொடங்கியதாலும், பிராணிகளை வளர்த்தமையாலும், ஓரிடத்தில் தங்கி வாழ முற்பட்ட புதிய கற்கால மக்கள், கிராம சமுதாயங்கள் உருவாகவும் வழி வகுத்தனர்.
  • கருவிகளை உருவாக்குவதிலும், மனிதனுக்குத் தேவையான சாதனங்களைப் படைப்பதிலும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட மாறுதல்களை இக்காலத்தில் தெளிவாகக் காணமுடிகிறது.
  • மண் குடிசைகளை அமைத்தான்; மனிதன் குடியிருப்புகளை உருவாக்கிக் கூட்டமாக வாழ்ந்தான்.
  • குடிசைகள், வட்டம் அல்லது நீள் வட்ட வடிவமானவை. இவை தரை மட்டத்திற்குக்கீழ், பள்ளமாக்கப்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டன. கூரைகளும் வேயப்பட்டன.  
  • புதிய கற்காலத்தில், இறந்தோரைப் புதைக்கும் பழக்கம் இருந்தது. அவ்வாறு புதைக்கும்போது, அவர்களுடன் பழகிய விலங்குகளையும் சேர்த்து, வீட்டின் முற்றத்திலேயே புதைத்தனர்.
  • இக்கருவிகள் நன்கு பளபளப்பாக தீட்டப்பட்டன. வேட்டையாடுவதற்கும், மரங்களை வெட்டுவதற்கும் பளபளப்பான கூரிய கற்கோடாரிகள் பெரிதும் பயனுடையதாக இருந்தன.
  • மட்பாண்டங்கள் செய்வதற்கு சக்கரம் பயன்படுத்தப்பட்டது.
  • சமைப்பதற்கும், உணவு தானியங்களை சேமித்து வைக்கவும் மட்பாண்டங்கள் பயன்பட்டன.
  • இறந்தோரை அடக்கம் செய்வதற்கு பெரிய மண்பாண்டத் தாழிகள் பயன்படுத்தப்பட்டன.
  • சாகுபடி முறைகளில் முன்னேற்றம் காணப்பட்டது.பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு இடங்களில் கோதுமை, பார்லி, நெல்,தினை போன்றவை பயிரிடப்பட்டன.
  • கிழக்கிந்தியாவில் நெல் அதிகம் பயிரிடப்பட்டது.செம்மறியாடுகள், ஆடுகள், மாடுகள், வளர்ப்பு பரவலாகக் காணப்பட்டது.
  • பயிரிடுவதற்கும், போக்குவரத்துக்கும், கால்நடைகள் பயன்பட்டன.பருத்தி மற்றும் கம்பளி ஆடைகளை புதிய கற்கால மக்கள் அணிந்தனர்.

Post a Comment

Previous Post Next Post