நீதிக்கட்சி - TNPSC UNIT 8 & 9

 நீதிக்கட்சி


  • ஆங்கிலேயர் ஆட்சியின்போது சென்னை மாகாணத்தில் தோன்றிய கட்சியே நீதிக்கட்சியாகும்.
  • சென்னையில் ட.எம். நாயர், தியாகராய செட்டியார் ஆகியோரால் 1916ஆம் ஆண்டு தென்னிந்திய நல உரிமைக் கழகம் தோற்றுவிக்கப்பட்டது.இதுவே பின்னர் நீதிக்கட்சி என்று அழைக்கப்பட்டது.
  • நீதிக்கட்சி தொடக்க காலத்தில் கோரிக்கை மனுக்கள் மூலம் பிராமணர் அல்லாதவர்களுக்கு நிர்வாகத்தில் அதிகப் பிரதிநிதித்துவம் கோரியது.
  • இக்கட்சி தமிழில் 'திராவிடன்', தெலுங்கில் ஆந்திர பிரகாசிகா'இதழ்களையும், ஆங்கிலத்தில் 'ஐஸ்டிஸ்' இதழையும் வெளியிட்டது.
  • நீதிக்கட்சி, இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்காமல் பிராமணர் அல்லாதார் நலன் காக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது.
நீதிக்கட்சியின் ஆட்சி:

  • நீதிக்கட்சி, 1920 முதல் 1937 வரை ஆட்சிப் பொறுப்பிலிருந்தது.
  • 1920-இல் நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றிய நீதிக்கட்சி, திரு.சுப்பராயலு ரெட்டியார் தலைமையில் ஆட்சி அமைத்தது.
  • 1923-இல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று பனகல் அரசர் தலைமையில் ஆட்சி அமைத்தது.
  • உட்கட்சிப் பூசலால் 1926-இல் நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெறவில்லை. டாக்டர்.சுப்பராயன் தலைமையில் சுயேட்சை அமைச்சரவை அமைக்கப்பட்டது.
  • இந்த அமைச்சரவையின் பதவிக்காலத்தில்தான் பெண் ஒருவர் முதன்முறையாக சட்டப்பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், அந்த அந்த சிறப்பைப் பெற்ற பெண்மணி டாக்டர் முத்துலட்சுமி ஆவார்.
  • மாநில சுயாட்சிக் கோரிக்கையை 1927 முதல் நீதிக்கட்சி எழுப்பி வந்தது.
  • 1930-இல் நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற்று ப.முனுசாமி நாயுடு தலைமையில் ஆட்சி அமைத்தது.
  • முனுசாமி நாயுடுவை 1932-ல் பதவி நீக்கிவிட்டு பொப்பிலி இராஜா முதலமைச்சராக பதவியேற்றார்.
  • மாநில சுயாட்சி திட்டத்தின்படி 1937-இல் நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி  தோல்வியடைந்தது சி.ராஜகோபாலசசாரி  தலைமையில் காங்கிரஸ்  ஆட்சியை  கைப்பற்றியது.இதனால் நீதிக்கட்சியின் வீழ்ச்சி தவிர்க்க முடியாததாயிற்று.
  • நீதிக்கட்சியின் தலைவராக பெரியார் 1938 டிசம்பர் 22 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  பெரியார் மற்றும் அவரது சுயமரியாதை இயக்கத்தின் கட்டுப்பாட்டில் சிறிது காலம் நீதிக்கட்சி செயல்பட்டது.
  • பெரியாருக்கும், பார்ப்பனத் தாலாார்களுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 1944. அக்டோபர் 4 - அன்று சேலத்தில் நடந்த நீதிக்கட்சி மாநாட்டில், பெரியார் நீதிக்கட்சியின் பெயரை 'திராவிடர் கழகம்' என மாற்றம் செய்து அதை ஒரு சமுதாய இயக்கமாக மாற்றினார். இதன் மூலம் நீதிக்கட்சி அரசியல் - தேர்தல் சார்ந்த செயற்பாடுகளிலிருந்து விடுவிக்கப்பட்டது.
நீதிக்கட்சியின் சாதனைகள்:

  • நீதிக்கட்சி தனது 17 ஆண்டுகால ஆட்சியின் போது பல சிறப்பான சீர்திருத்தங்களைச் செய்தது.
  • நீதிக்கட்சி கொண்டுவந்த சென்னைத் தொடக்கக் கல்விச் சட்டம் - 1920,ஆண், பெண் குழந்தைகளுக்குக் கட்டாயக் கல்வியை அறிமுகப்படுத்தியது.
  • மதராஸ் தல போர்டுகள் சட்டம் - 1920, மதராஸ் கிராமப் பஞ்சாயத்துகள் சட்டம்- 1920 - ஆகிய இரண்டு உள்ளாட்சி மன்றச் சட்டங்கள் மூலம் மூன்றடுக்குப் பஞ்சாயத்து முறைக்கு வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டது.
  • பிராமணர் அல்லாதவரின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு 1921-இல்பிறப்பிக்கப்பட்ட இனவாரி ஒதுக்கிட்டு அரசாணை (Communal G.O.) உத்திரவாதமளித்தது.
  • பணியாளர் தேர்வு வாரியத்தை 1924-இல் ஏற்படுத்தியது. இது பொதுப்பணித்தேர்வாணையமாக 1929-இல் மாறியது. இதுவே இந்தியாவின் முதல்பொதுப்பணித் தேர்வாணையமாகும்.
  • 1925-இல் ஆந்திரப் பல்கலைக்கழகமும், 1929-இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் தொடங்கப்பட்டன.
  • இந்து சமய அறநிலையச் சட்டம் 1926-இல் இயற்றப்பட்டது. கோயில்களில் வரவு செலவுக் கணக்குகளை முறைப்படுத்த கோயில் குழுக்கள் அமைக்கப்பட்டன.
  • பெண்களுக்கு வாக்குரிமை 1921-ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.

Post a Comment

Previous Post Next Post