பாரதிதாசன்

பாரதிதாசன்:

இடுகையின் பெயர் தொடர்புள்ளவை
இயற்பெயர் கனகசுப்புரத்தினம்
தந்தை கனகசபை
தாய் இலக்குமி அம்மாள்
புலமை தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம்
சிறப்பு பெயர்கள் பாவேந்தர், புரட்சிக் கவி
பிறந்த ஊர் புதுச்சேரி
பிறப்பு 29-04-1891
இறப்பு 21-04-1964

  1. பாரதியார் மீது கொண்ட பற்றினால் 'பாரதிதாசன்' என மாற்றிக் கொண்டார். 
  2. புதுவை அரசு கல்லூரியில் தமிழ் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
  3. தொடக்க காலத்தில் பாரதிதாசன் கடவுள் நம்பிக்கை கொண்டிருந்தார் பாரதியுடன் அறிமுகமாகும்போது அவர் பாடிய “எங்கெங்கும் காணினும் சக்தியடா - தம்பி ஏழுகடல் அவள் வண்ணமடா" என்ற பாடலால் அறியலாம். 
  4. தமிழின் மேன்மையை உணர்த்த “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு” என்கிறார்.
  5. ஏழை பணக்காரர் என்ற நிலை மாற வேண்டும் என்பதனை உணர்த்த “ஓடப்ப ராயிருக்கும் ஏழையப்பர் உதையப்ப ராகிவிட்டால் ஓர் நொடிக்குள் ஒடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பா நீ'' என்று பாடுகிறார். 
  6. வாடாதப் பூப்போன்ற மங்கை நல்லாள் மணவாளன் இறந்தால் பின் மணத்தல் தீதோ” என்று விதவை மறுமணத்திற்கு குரல் கொடுத்தார்.
  7. இவர் தந்தைப் பெரியாரின் பகுத்தறிவு கொள்கையால் ஈர்க்கப்பட்டார்.
  8. அறிஞர் அண்ணா அவர்களின் முயற்சியால் ரூ. 2500 பொற்கிழியும் புரட்சிக் கவிஞர் என்ற விருதும்  1946-இல் பெற்றார். 
  9. பாரதிதாசனின் நூற்றாண்டு விழாவின் போது தமிழக அரசு அவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியது.
  10. பாரதிதாசன் பாடல்கள் 'செக்' மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. 
  11. இருட்டறையில் உள்ளதடா உலகம் என்று சாதிப்பற்றினைச் சாடும் வகையில் பாடினார்.
  12. இவரது 'பிசிராந்தையார்' நாடகம் சாகித்திய அகாடெமி பரிசு பெற்றது.

பாரதிதாசன் படைப்புகள்

  • சேர தாண்டவம்
  • மணிமேகலை வெண்பா
  • குடும்ப விளக்கு
  • எதிர்பாராத முத்தம்
  • அழகின் சிரிப்பு
  • குறிஞ்சித் திட்டு
  • சஞ்சீவி பர்வதத்தின் சாரல் 
  • இளைஞர் இலக்கியம்
  • இசையமுது
  • இருண்டவீடு
  • பிசிராந்தையார்
  • பாண்டியன் பரிசு
  • படித்த பெண்கள்
  • சௌமியன்
  • தமிழியாக்கம்
  • தமிழச்சியின் கத்தி
  • இரணியன் முதலியன

பாரதிதாசன் நடத்திய இதழ்கள்

  • குயில்,
  • பொன்னி 
ஆகிய இதழ்களை நடத்தினார். 

Post a Comment

Previous Post Next Post