மருது சகோதரர்கள்
தந்தை - மூக்கையா பழநியப்பன்தாய் - பொன்னாத்தாள்
ஆங்கிலேய நடவடிக்கைகளால் வெறுப்புற்றிருந்த மக்கள் எதிர்ப்பாளர்கள் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டதால் புரட்சிக்கு ஆயத்தாமாயினர். ஒட்டுமொத்த எதிர்ப்பை ஒருங்கிணைத்து கூட்டணி ஏற்படுத்தியவர்கள் மருது சகோதரர்கள்.
சிவகங்கையை ஆட்சி செய்த முத்துவடுகநாதரிடம் இராணுவ வீரர்களாக பணியாற்றியவர்களே சின்னமருது,பெரிய மருது ஆவர்
முத்து வடுகநாதரின் மனைவியே வீரமங்கை வேலுநாச்சியார்.
பிற்காலத்தில் ஆட்சியாளர்களான மருது சகோதரர்கள் ஆங்கில எதிர்ப்பாளர்களை ஒருங்கிணைத்து தென்னிந்தியக் கூட்டமைப்பை ஏற்படுத்தினார்.
தென்னிந்தியக் கூட்டமைப்பு
கூட்டமைப்பு | தலைமை |
---|---|
இராமநாதபுரம்/ சிவகங்கை | மருது சகோதரர்கள் |
திருநெல்வேலி | கட்டபொம்மன் |
திண்டுக்கல் | கோபால நாயக்கர் |
மலபார் | கேரள வர்மா |
மைசூர் | கிருஷ்ணப்ப நாயக்கர் |
கன்னட மராத்தியர் | தூண்டாஜி வாக் |
1800 ஜீன் 3-ம் தேதி எனத் திட்டமிடப்பட்டிருந்த கிளர்ச்சி 1800 மார்ச் 30-ம் தேதியே மராத்திய மன்னர் தூண்டாஜியால் ஆரம்பிக்கப்பட்டது. தென்னிந்தியக் கூட்டணியின் வலுவான எதிர்ப்பால் புரட்சி நீடித்துக் கொண்டிருந்த சமயத்தில் மருது சகோதரர்களால் திருச்சி பிரகடனம் 1801ல் வெளியிடப்பட்டு நவாபின் கோட்டை சுவரிலும், ஸ்ரீரங்கம் கோயில் சுவரிலும் ஒட்டப்பட்டது. ஆங்கிலேயருக்கு எதிராக அனைத்து இந்தியர்களையும் ஒருங்கிணைந்த முதல் பிரகடனம் இதுவாகும்.
கிளர்ச்சியின் முக்கிய கேந்திரமான காளையார் கோவிலின் சிறுவயல் பகுதியை கி.பி.1801ம் ஆண்டு மே-29ம் நாள் கர்னல் அக்னுவின் தலையிைலான ஆங்கிலப்படை தாக்கியது. மருது சகோதர்கள் தோற்கடிக்கப்பட்டனர். ஆங்கியலேயர்களால் தோற்கடிக்கப் பட்ட மருது சகோதரர்கள் சிங்கம்புணரி காட்டில் மறைந்து கொண்டனர்.
1801 ஜீலை 31-ல் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கைப்படி தமிழகம் முழுவதும் ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் வந்தது.
மருது சகோதரர்கள் புதுக்கோட்டை மன்னரால் காட்டிக் கொடுக்கப்பட்டு 1801அக். 24-ல்திருப்பத்தூர் கோட்டை யில் தூக்கிலிடப்பட்டார்.
பாஞ்சாலங்குறிச்சியில் மீண்டும் புரட்சி செய்த ஊமைத்துரை நவம்பர் 16,1801-ல் கழுவேற்றப்பட்டார்.
தோல்விக்கான காரணங்கள்:
- திட்டநாளுக்கு இரண்டு மாதத்திற்கு முன்னரே தொடங்கப்பட்டது.
- ஒற்றுமையின்மை மற்றும் சில மன்னர்கள் ஆங்கிலேயருக்கு ஆதரவு அளித்தது.
- நவீன ஆயுதங்கள் இல்லாமல் நேரடி மோதலில் ஈடுபட்டது.
- பொதுமக்கள் ஆதரவு முழுமையாக கிடைக்கவில்லை.