அகப்பொருள் இலக்கணம்

அகப்பொருள் இலக்கணம்

ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதல் உணர்வை மையமாகக்கொண்டு அகப்பொருள் இலக்கணம் அமைந்துள்ளது. இதில் தலைவியின் தோழியும் அகப்பொருள் பாடல்களில் முக்கிய இடம் வகிக்கும் ஒரு பாத்திரம் ஆவாள். காதல் பற்றி பாடும்போது தலைவன் தலைவி என்று பொதுவாகப் பாடுவார்களே தவிர ஒருவருடைய இயற்பெயரைச் சுட்டிப் பாடுவதில்லை. காதல் உணர்ச்சி எல்லோருக்கும் பொது என்பதால் தனி ஒருவருடைய பெயரைச் சுட்டிப்பாடு வதில்லை. அகப்பொருள் பாடல்கள் நாடகப் பாங்கிலான தன்மைக் கொண்டிருக்கும். எல்லாப்பாடல்களும் தலைவன், தலைவி, தோழி முதலியவர்களின்யாராவது ஒருவர் கூறுகூதாக அமைந்திருக்கும். ஒரே பாடலில் இருவர் மூவர் உரையாடுவது போல இருக்காது. ஒவ்வொரு பாடலுக்கும் திணை, துறை கூறப்பட்டிருக்கும். திணை. நிலம் சார்ந்த ஒழுக்கத்தைக் குறிக்கும். துறை என்பது பாடப்பெற்ற சூழலைக் குறிக்கும். அகப்பொருள் இலக்கணம் திணை அடிப்படையில் அமைந்ததாகும். அகப்பொருள் திணைகள் ஐந்து அவை: 

  1. குறிஞ்சித் திணை
  2. முல்லைத் திணை
  3. மருதத் திணை
  4. நெய்தல் திணை
  5. பாலைத் திணை
இந்த ஐந்து திணைகளுக்கும் உரிய அகப்பொருள் இலக்கணம் மூன்றுவகைப்படும். அவை. 
  1. முதற்பொருள்.
  2. கருப்பொருள்.
  3. உரிப்பொருள்  
ஆகியன ஆகும்.

முதற்பொருள்:

நிலம், பொழுது ஆகிய இரண்டு முதற்பொருள் எனப்படும். உலகில் உள்ள உயிர்கள் தோன்றுவதற்கும், இயங்குவதற்கும் ஆதாரமாக உள்ளதால் இவற்றை முதற்பொருள் என்பர். 

நிலம்:

ஒவ்வொரு திணைக்கும், உரிய நிலம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐந்து திணைகளுக்கும் உரிய நிலங்கள் பின்வருமாறு  
இடுகையின் பெயர் தொடர்புள்ளவை
குறிஞ்சி மலையும் மலை சார்ந்த இடமும்
முல்லை காடும் காடு சார்ந்த இடமும்
மருதம் வயலும் வயல் சார்ந்த இடமும்
நெய்தல் கடலும் கடல் சார்ந்த இடமும்
பாலை பாலை நிலமும் பாலை நிலம் சார்ந்த இடமும்

தமிழ்நாட்டில் உள்ள நிலப்பகுதி இவ்வாறு ஐந்து திணைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பொழுது

பொழுது:

பொழுது என்பது காலம் என்றுபொருள்படும். பொழுது சிறு பொழுது, பெரும்பொழுது என்று இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சிறுபொழுது

சிறுபொழுது:

சிறுபொழுது என்பது ஒரு நாளின் காலப் பிரிவுகள் ஆகும். சிறுபொழுது பின்வருமாறு அமையும்
இடுகையின் பெயர் தொடர்புள்ளவை
வைகறை விடியற்காலம்
காலை காலைநேரம்
நண்பகல் உச்சி வெயில் நேரம்
எற்பாடு சூரியன் மறையும் நேரம்
மாலை முன்னிரவு நேரம்
யாமம் நள்ளிரவு நேரம்

சிறுபொழுது ஆறும் ஒரு நாளின் ஆறு கூறுகளாக இருப்பதை அறியலாம். பெரும்பொழுது

பெரும்பொழுது:

பெரும்பொழுது என்பது ஓர் ஆண்டின் காலப்பிரிவு ஆகும். ஆண்டில் உள்ள பன்னிரண்டு மாதங்களையும் ஆறு பிரிவுகளாகப் பிரிப்பர். இது நீண்ட காலப் பிரிவாக இருப்பதால் பெரும்பொழுது எனப்படுகிறது. ஆண்டில் உள்ள பன்னிரண்டு மாதங்களும் பின்வருமாறு ஆறு பெரும் பொழுதுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 
இடுகையின் பெயர் தொடர்புள்ளவை
சித்திரை, வைகாசி இளவேனில் காலம்
ஆனி, ஆடி முதுவேனில் காலம்
ஆவணி, புரட்டாசி கார் காலம்
ஐப்பசி, கார்த்திகை குளிர்காலம்
மார்கழி, தை முன்பனிக்காலம்
மாசி, பங்குனி பின்பனிக் காலம்

சிறுபொழுது, பெரும்பொழுது ஆகியவற்றை இவை இந்தத் திணைகளுக்கு உரியவை என்று பிரித்து வைத்துள்ளனர்.
திணை பெரும்பொழுது சிறுபொழுது
குறிஞ்சி குளிர்காலம்,முன்பனிக் காலம் யாமம்
முல்லை கார்காலம் மாலை
மருதம் ஆறுகாலமும் வைகறை
நெய்தல் ஆறுகாலமும் எற்பாடு
பாலை முதுவேனில், பின்பனி நண்பகல்

ஒவ்வொரு நிலத்திற்கும் மேலே குறிப்பிட்ட காலங்கள் சிறந்தனவாக இருக்கும் என்பதால் இவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது. 

கருப்பொருள்:

நிலமும் பொழுதும் ஆகிய இரண்டு முதற்பொருள்கள் அத்திணையில் உள்ள சூழலைத் தீர்மானிக்கின்றன. இவற்றின் காரணமாக ஒவ்வொரு திணையிலும் சூழல் வேறுபட்டுள்ளது. ஒவ்வொரு திணையிலும் வாழும் மக்கள், அவர்களின் தொழில் உணவு, பொழுதுபோக்கு, அந்த நிலத்தில் உள்ள மரங்கள், பறவைகள், விலங்குகள், நீர்நிலை முதலியவற்றைக் கருப்பொருள் என்கின்றனர். கருப்பொருள், பாடல்களில் பின்னணியாகச் செயல்படுகின்றது. அனைத்து திணைக்கும் உரிய கருப்பொருள் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

குறிஞ்சி|முல்லை|மருதம்|நெய்தல்|பாலை

இடுகை குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை
தெய்வம் முருகன் திருமால் இந்திரன் வருணன் கொற்றவை
மக்கள்
  1. குறவர்
  2. குறத்தியர்
  1. ஆயர்
  2. ஆய்ச்சியர்
  1. உழவர்
  2. உழத்தியர்
  1. பரதவர்
  2. பரத்தியர்
  1. மறவர்
  2. மறத்தியர்
பறவை
  1. கிளி
  2. மயில்
காட்டுக்கோழி
  1. அன்னம்
  2. நாரை
கடல் காகம்
  1. பருந்து
  2. கழுகு
விலங்கு
  1. யானை
  2. புலி
  1. முயல்
  2. மான்
  1. நீர்நாய்
  2. எருமை
சுறா செந்நாய்
பூ
  1. குறிஞ்சி
  2. வேங்கை
  1. முல்லை
  2. பிடவம்
  1. கழுநீர்
  2. தாமரை
  1. முண்டகம்
  2. நெய்தல்
குராமரா
மரம்
  1. அகில்
  2. தேக்கு
  1. காயா
  2. கொன்றை
  1. மருதம்
  2. காஞ்சி
  1. ஞாழல்
  2. புன்னை
  1. பாலை
  2. ஊழிஞை
பண் குறிஞ்சிப் பண் சாதாரி மருதம் செவ்வழி <பஞ்சுரம்
யாழ் குறிஞ்சியாழ் முல்லை யாழ் மருத யாழ் விளரி யாழ் பாலை யாழ்
உணவு
  1. தினை
  2. மலை நெல்
  1. முதிரை
  2. வரகு
  3. சாமை
  1. வெண்ணெல்
  2. செந்நெல்
மீன் வழிப்பறிஉணவு
தொழில்
  1. தேன் எடுத்தல்
  2. வெறியாடல்
  1. ஏறுதழுவுதல்
  2. மேய்த்தல்
  1. நெல் அரிதல்
  2. விழா எடுத்தல்
  1. மீன் பிடித்தல்
  2. கடலாடுதல்
  1. சூறையாடல்
  2. வெஞ்சமம் எடுத்தல்

உரிப்பொருள்

பூக்களும் மற்ற நிலங்களிலும் இருக்கக் கூடும். ஒவ்வொரு திணைக்கும் உரிய பொருளை எனினும், அந்தந்த நிலங்களுக்கு அவை உரிப்பொருள் என்பர்.உரிப்பொருள் சிறப்பு வாய்ந்தவை என்பதால் ஒரு திணைக்கு திணைக்கும் உரிய முக்கிய உணர்ச்சியைக் உரியதாக அவை சொல்லப்பட்டுள்ளன. குறிக்கிறது. ஐந்து திணைகளுக்கும் உரிப்பொருள்களும் அவ்வாறே சிறப்புக் உரிப்பொருள் பின்வருமாறு

இடுகையின் பெயர் தொடர்புள்ளவை
குறிஞ்சி புணர்தலும் புணர்தல் நிமித்தமும்
முல்லை இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
மருதம் ஊடலும் ஊடல் நிமித்தமும்
நெய்தல் இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
பாலை பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

Post a Comment

Previous Post Next Post