களவு போன மிதிவண்டி அல்லது இருசக்கர வாகனம் மீட்டு தருமாறு காவல்துறை ஆணையருக்கு புகார் கடிதம் எழுதுவது எப்படி என்று பார்ப்போம்.
அனுப்புநர்புகார் கடிதம்
பெயர்,முகவரி,இடம்.
பெறுநர்
காவல்துறை ஆணையர் அவர்கள்,
காவல்துறை ஆணையர் அலுவலகம்,
இடம்.
மதிப்பிற்குரியிய ஐயா
வணக்கம் நான் இன்று (தேதி) மாலை 6 மணி அளவில் ஜீவா நகரில் உள்ள பூங்காவின் முன்னால் என் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு உள்ளே சென்றேன்.திரும்பி வந்து பார்த்தபோது என் இருசக்கர வாகனத்தை காணவில்லை.அக்கம் பக்கம் விசாரித்து பார்த்ததில் என் வண்டி களவு போனதை தெரிந்து கொண்டேன்.சிவப்பு நிறத்தில் இருக்கும் என் வண்டியின் எண் (TN67 AB1234) ஆகும்.தயவு செய்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து குற்றவாளியை கண்டுபிடித்து எனது இருசக்கர வாகனத்தை கண்டுபிடித்து தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.பொருள்: களவு போன இருசக்கர வாகனத்தை மீட்டு தர வேண்டுதல்
நன்றி
இப்படிக்கு,
பெயர்.
இடம்:
தேதி:
உறைமேல் முகவரி:
பெறுநர்:
காவல்துறை ஆணையர் அவர்கள்,
காவல்துறை ஆணையர் அலுவலகம்,
இடம்.
Tags:
letter