பூலித்தேவன்:
பெற்றார்:சித்திரபுத்திர தேவர், சிவஞானம் நாச்சியார்.
மனைவி:கயல்கனி நாச்சியார்
பிறப்பு:1-09-1715
மதுரையில் பிரிட்டிஷ் படைத்தளபதி மாபஸ்கான் முறையான கப்பம் கட்டாததால் பூலித்தேவன் மீது போர் அறிவித்தார். கி.பி. 1755ல் நெற்கட்டும் சேவல் பகுதியில் நடந்த சண்டையில் ஆங்கிலேப்படை தோற்கடிக்கப்பட்டது.
அப்போதைய காலக்கட்டத்தில் ஆங்கிலேய படையை எதிர்த்து இந்திய மன்னர் பெற்ற வெற்றி இதுவாகும்
மேற்கொண்டு தன் வலிமையை பெருக்க பூலித்தேன் ஐதர் அலி மற்றும் பிரெஞ்சு உதவியை நாடினார். ஐதர் அலியும் மராட்டியரும் போரில் ஈடுபட்டிருந்தால் உதவ முடிய வில்லை. ஆங்கிலேயர் கான்சாகிப் (எ) யூசுப் கானுக்கு பூலித்தேவனை அடக்கும் பொறுப்பை ஒப்படைத்தனர்.
யூசுப் கான் என்பவரே பின்நாட்களில் அறியப்பட்ட மருதநாயகம்.
கி.பி. 1759-ல் கான்சாகிப் தலைமை யில் திருவிதாங்கூர் மன்னர் மார்த் தாண்ட வர்மன் மன்னர் உதவியுடன் நெற்கட்டும் செவ்வில் கோட்டை முற்றுகையிடப்பட்டது.
பூலித்தேவன் தோற்கடிக்கப்பட்டார். கி.பி. 1764-ல் மீண்டும் பூலித்தேவன் கோட்டையை கைப்பற்றினாலும் கி.பி. 1767ம் ஆண்டு ஆண்டு கர்னல் கேம்பெல் என்பரால் பூலித்தேவன் தோற்கடிக்கப்பட்டு கோட்டை முழுவதுமாக கைப்பற்றப் பட்டது.