புலிப்பாணி ஜோதிடம் 300 என்னும் நூலில் புலிப்பாணி சித்தர் புதன் திசைக்கு கூறிய பலன்கள். இவை அனைத்தும் பொதுப்பலன்களே லக்ன நிலை மற்றும் கிரக வலிமையை பொருத்து பலன்கள் மாறுபடும்.
புதன் மகாதிசை, புதன் புத்திப் பலன்கள்
அடியில் நின்ற புதன் திசைதான்
வருஷம்பதினேழு அதனுடைய புத்தியதுமாதம்
நாலேழ் முடியில்நின்ற நாளதுவும் மூவொன்பதாகும்
மூர்க்கமுள்ள அதன் பலனைக் கூறக்கேளே!
படியில்நின்ற பழம்பொருளும் பாவையருஞ்சேருவன்
பாங்கான சோபனமும் பாங்குடனேகாணும்
குடியில்நின்ற தெய்வங் குணமுடனேசேரும்
குடும்பத்தில் புத்திரனும் குணமுடனே வாழ்வான்
புதமகாதிசை மொத்தம் 17 ஆண்டுகளாகும். இதில் புதனது சுயபுத்தி 2 வருடம் 4 மாதம் 27 நாள்களாகும். இக்காலகட்டத்தில் நிகழும் பலன்களாவன: மூதாதையரின் கூட்டும் அதனால் மகிழ்ச்சியும் இன்பமும் நேரும். குலதெய்வம் மனமொன்றி இருந்து குடும்ப நலத்தைக் காக்கும். அதோடு குடும்பப் பொறுப்புணர்ந்து புத்திரனும் நற்குணம் நற்புகழ் பெற்று வாழ்வான் என்று போகர் அருளால் புலிப்பாணி பாடினேன்.
புதன் மகாதிசை, கேது புத்திப் பலன்கள்
பாடல் 252
வாழலாம் புதன் திசையில் கேதுபுத்தி
வகையில்லா மாதமது பதினொன்றாகும்
குள்ளலாம் நாளதுவும் யிருபத்தியேழு
கொடுமையுள்ள அதன்பலனைக் கூறக்கேளு
மாளலாம் பகைவரும் உத்தாநாசம்
மணமில்லா வியாதியதும் மடிந்து கொல்லும்
தேடலாம் திரவியங்கள் சேதமாகும்
தினந்தோறும் சத்துருவும் நீதான்பாரே.
பாடல் விளக்கம்
புதமகாதிசையில் கேது பகவானின் ஆதிக்க காலம் 11 மாதம் 27 நாள்களாகும். இக்கால கட்டத்தில் நிகவும் பலன்களாவன: மாண்டு போகலாம் என்ற எண்ணத்தை அளிக்கும். வலியபகை வந்து சேர்தலோடு செய்தொழில் நாசம் அடையும். விரும்பத்தகாத வியாதிகளும் வந்தடையும்., அதனால் மரணமும் நேரும். நிறைந்த செல்வங்கள் தேடிப் பெற்றாலும் அவை அழிவுறும். ஒவ்வொரு நாளும் புதுப்புதுப் பகைவர் தோன்றுவர். இதனை நீ அறிவாயாக என்று போகர் அருளால் புலிப்பாணி பாடினேன்.
புதன் மகாதிசை, சுக்கிர புத்திப்பலன்கள்
பாடல் 253
பாரப்பா புதன் திசையில் சுக்கிரபுத்தி
பாங்குள்ள மாதமது முப்பத்தினாலு
சேரப்பா அதன் பலனைச் செப்பக்கேளு
தேவதையால் தர்க்கமது தீதாம்பாரு
ஆரப்பா மனைவியுடன் புத்திரனும்
அனுதினமும் வாழ்ந்திருப்பன் அலங்காரமுடன்
காரப்பா கனகமது கனசம்பத்துண்டாம்
கனமான ராசாவால் கடாட்ச முண்டாங்கேளே
பாடல் விளக்கம்
புதமகா திசையில் சுக்கிர பகவான் புத்தி. கேட்பாயாக! தேவதை கோபத்தால் குடும்பத்தில் தர்க்கம் ஏற்படும். இது தீமையானதே எனினும் மனைவி மக்களுடன் அன்யோன்யமான வசியமுடன் இச்சாதகன் அலங்காரமுடன் வாழ்ந்திருப்பான். பொன்னாபரணச் சேர்க்கை உண்டாகும். வாகனயோகம் ஏற்படும். பெருமைமிக்க அரசரின் கருணையும் உண்டாகும் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறும் இக்கருத்தைக் கவனமாகக் கேட்பாயாக!
புதன் மகாதிசை, சூரிய புத்திப் பலன்கள்
பாடல் 254
கேளப்பா புதன் திசையில் சூரிய புத்தி
கெணிதமுள்ள நாளறும் மாதம்பத்து
ஆளப்பா அதன் பலனை அரையக்கேளு
ஆதிகுரு தலஞ்சிவ பதங்களுள்ளாம்
காணப்பா காவியது வேஷ்டியுண்டு
காசினியில் பரதேசி ஆகிப்போவான்
வாளப்பா மடபதியிலுருந்து கொண்டு
மனையாட்டி தன்னுடனே வாழ்ந்திருப்பான் தானே.
பாடல் விளக்கம்
புதமகா திசையில் சூரியனின் ஆதிக்க காலம் 10 மாதம் 6 நாள்கள். இக்காலத்தில் நிகழ்த்தும் பலன்களைக் கூறுகிறேன். கேட்பாயாக! இச்சாதகன் இக்கால கட்டத்தில் சிவார்ச்சனை செய்வதோடு ஹோம சாந்தி முதலியன நிகழ்த்தி நிறையருள் பெறுவான். இவன் பூமியில் பரதேசியாக ஆகித்திரிவான். பின்னர் மடாதிபதியாகி இல்லறத்தினைத தொடர்வான் எனப் போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
புதன் மகாதிசை, சந்திர புத்திப்பலன்கள்
பாடல் 255
தானென்ற புதன் திசையில் சந்திரபுத்தி
தாழ்வான் மாதமது பதினேழாகும்
தேனென்ற அதன் பலனைச் சொல்லக்கேளு
தெரிவையர்கள் கலகமுடன் யிளைப்புசயரோகம்
கோனென்ற ராசாவால் குடிகேடு செய்யும்
கோதையர்கள் தன்னாலே குடிபாழாகும்
வானென்ற வான்பொருளும் வகையில்லாச்சேதம்
வையகத்தில் நீதியில்லா மாதரைச்சேர்வாரே.
பாடல் விளக்கம்
புதமகா திசையில் சந்திர புத்திக்காலம் 1 வருடம் 5 மாதங்களும். இவன் தன் ஆதிக்க காலத்தில் நிகழ்த்தும் பலன்களைக் கூறுகிறேன். கவனமாகக் கேட்பாயாக! பெண்களால் கலகமும் ,இளைப்புநோய், சயரோகம் முதலிய நோய் உபாதைகளும் ஏற்படும். அரசனின் தொல்லையால் குடும்பத்திற்கே கேடு உண்டாகும். அதேபோல் பெண்களாலும் குடும்பமும் பாழாகும். அளவில்லாத செல்வமும் எதிர்பாரா வண்ணம் அழியும். தீதியை நினையாத வேசையரைச் சேர்ந்தின்புறம் சந்தர்ப்பம் ஏற்படும் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
புதன் மகாதிசை, செவ்வாய் புத்திப் பலன்கள்
பாடல் 256
சேரலாம் புதன் திசையில் செவ்வாய்புத்தி
செயமில்லா மாதம் பதினொன்றாகும்
தேரலாம் நாளதுவு மிருபத்தேழில்
தெரிவையர்கள் தன்னாலே கிரந்தியது நோவாம்
மாரலாம் சத்துருவால் மயக்கமுடன்பேயும்
மனதான சகோதரமும் அதனால் சேதம்
பாரலாம் பலநிதியுங் கெடுதிகாணும்
பணமுடைய பூமிமுதல் பலனுந்தீதாம்
பாடல் விளக்கம்
இந்த புதமகா திசையில் செவ்வாயின் ஆதிக்க காலம் வெற்றியினைத் தராத 11 மாதம் 27 நாள்களாகும். இக்கால கட்டத்தில் இச்சாதகன் பெண்களால் கிரந்தி முதலிய ரோகங்களைப் பெறுவான். சத்துரு உபாதையுண்டாகும், அதனால் மனத்தில் பீடியும் மயக்கமும் உண்டாகும். நோயுபாதையால் மனமுடைய சகோதரமும் நஷ்டமடையும். பலவகைச் செல்வமும் பங்கப்படும். வெகுதனம் நல்கும் பூமியும் விளைச்சல் குன்றி துர்ப்பலனே தரும் என்று போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.
புதன் மகாதிசை, இராகு புத்திப் பலன்கள்
பாடல் 257
பலனில்லா புதன் திசையில் ராகுபுத்தி
பாழான மாதமது முப்பதாகும்
நலமில்லா நாளதுவும் பதினெட்டாகும்
நன்றாக அதன் பலனை நவிலக்கேளு
பலமில்லாப் பிணிகளுடன் மயக்கம்சேதம்
புரட்டான சத்துருவால் பேதையர்கள் பாசம்
தலமில்லா வியாதியினால் நற்பொளும்
சேதம் நன்றான வீடுமுதல் பூமிநிதிபோமே
பாடல் விளக்கம்
புதமகா திசையில் இராகு புத்தி தீங்கு தருகின்ற 2 வருடம் 6 மாதம் 18 நாள்களாகும். இவ்விராகு பகவான் இவரது ஆதிக்ககாலத்தில் நிகழ்த்தும் பலன்களாவன: தேக பலத்தைச சிதைக்கும். பலவித நோய்களும் மயக்கமும் ஏற்பட்டு அதனால் பெரும் பொருட் சேதம் உண்டாகும். முரண்பட்டுப் பேசக் கூடிய பகைவர்களால் அறிவற்றவர் நேசம் ஏற்படும். இடையீடில்லாத வியாதிகளால் பெரும் பொருள் சேதமாவதுடன் நல்ல கட்டுக்கோப்போடு வீடு முதலாக விளைவயலும் பெருநிதியும் அழியும் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
புதன் மகாதிசை, வியாழன் புத்திப்பலன்கள்
பாடல் 258
போமென்ற புதன் திசையில் வியாழபுத்தி
புகழுள்ள மாதமது யிருபத்தேழு
நாமென்ற நாளதுவும் ஆறதாகும்
நன்றாக வதன் பலனை நவிலக்கேளு
தாமென்ற சத்துருநோய் பயமும்போகும்
சகலசம் பத்துண்டாகும் தரணியில் வாழ்வன்
யோகமென்ற யோகமது கைக்குள் சிக்கும்
யேகமாம் புத்திரனும் யிதிலுண்டாகும்
பாடல் விளக்கம்
புதமா திசையில் வியாழ பகவான் புத்திக் காலம் பெரும் புகழ் தருவதான 2 வருடம் 3 மாதம் 6 நாள்களாகும். இவர் தன் ஆதிக்க காலத்தில் அளிக்கும் பலன்களைக் கூறுகிறேன். கேட்பாயாக! சத்துரு உபாதையும், நோயும், மனபயமும் நீங்கி சகலவிதமான செல்வ நலங்களும் பெருகி இப்பூமியில் பெரும் புகழுடன் வாழ்வான். சகலவிதமான யோகங்களும் சித்திக்கும். அனேக புத்திரர்களும் இச்சாதகனுக்கு உண்டாம் என்று போகர் பேரருளால் புலிப்பாணி கூறினேன்.
புதன் மகாதிசை, சனி புத்திப் பலன்கள்
பாடல் 259
பாரப்பா புதன் திசையில் சனியின் புத்தி
பாழான மாதமது முப்பத்திரண்டு
சேரப்பா நாளதுவும் ஒன்பதாகும்
செலுத்துகிற பலணாபு ஊவே செப்பக்கேளு
வீரப்பா சத்துருவால் சூனியமுண்டாம்
விதியில்லா நோய்போலே விதங்கேடுபண்ணும்
மாரப்பா மனைவியரும் புத்திரரும் தானும்
மரணமாம் உன்னுடலு மரணமாமே
பாடல் விளக்கம்
புதமகா திசையில் சனிபகவான் புத்திக்காலம் 2 வருடம் 8 மாதம் 9 நாள்களாகும். இவர் ஆதிக்க காலத்தில் நிகழ்த்தும் பலன்களாவன பலமுள்ள சத்துருக்களால் இந்த ஜாதகருக்கு பல தொல்லைகள் ஏற்படும். உயிர்கொல்லி நோயைப் போல இருந்த நிலை சிதைந்து கேடுற நேரிடும். மனைவியும் படுத்திருக்கும் கண்டம் வரலாம். ஜாதகருக்கும் கண்டம் வரும் என்று போகரது அருட்கருணையால், புலிப்பாணி கூறினேன்.