புயலால் பழுதடைந்துள்ள மின்கம்பங்களை சரிசெய்து தர மின்வாரிய அலுவலருக்கு விண்ணப்பம்

உங்கள் பகுதியில் ஏற்ட்ட கடும்புயலில்  பழுதடைந்த மின்கம்பங்களைச் சரிசெய்தும் தருமாறு மின்வாரிய அலுவலருக்கு கடிதம் எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.

அனுப்புநர்

முத்து,

பாம்பன்,

இராமநாதபுரம்.

பெறுநர்

மின்வாரிய அலுவலர் அவர்கள்,

மின்வாரிய அலுவலர் அலுவலகம்,

இராமநாதபுரம்.

ஐயா,

பொருள் : புயலால் பழுதடைந்துள்ள மின்கம்பங்களை சரிசெய்து தர வேண்டுதல் தொடர்பாக. 

எங்கள் பகுதியில் ஏற்பட்ட கடும்புயலில் ஏராளமான மின்கம்பங்கள் சாய்ந்துவிட்டன.சாலைகளின் மீதும் மின்கம்பங்கள் சாய்ந்து கிடக்கின்றன. இதனால் போக்குவரத்தும் பாதிப்படைந்துள்ளது. எனவே, பழுதடைந்த மின்கம்பங்களைச் சரிசெய்தும் தருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

இடம்: பாம்பன்

நாள்: 18/08/2021

இப்படிக்கு,

முத்து

உறைமேல் முகவரி :

பெறுநர்

மின்வாரிய அலுவலர் அவர்கள், 

மின்வாரிய அலுவலர் அலுவலகம்,

இராமநாதபுரம்

Post a Comment

Previous Post Next Post