உங்கள் பகுதியில் ஏற்ட்ட கடும்புயலில் பழுதடைந்த மின்கம்பங்களைச் சரிசெய்தும் தருமாறு மின்வாரிய அலுவலருக்கு கடிதம் எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.
அனுப்புநர்
முத்து,
பாம்பன்,
இராமநாதபுரம்.
பெறுநர்
மின்வாரிய அலுவலர் அவர்கள்,
மின்வாரிய அலுவலர் அலுவலகம்,
இராமநாதபுரம்.
ஐயா,
பொருள் : புயலால் பழுதடைந்துள்ள மின்கம்பங்களை சரிசெய்து தர வேண்டுதல் தொடர்பாக.
எங்கள் பகுதியில் ஏற்பட்ட கடும்புயலில் ஏராளமான மின்கம்பங்கள் சாய்ந்துவிட்டன.சாலைகளின் மீதும் மின்கம்பங்கள் சாய்ந்து கிடக்கின்றன. இதனால் போக்குவரத்தும் பாதிப்படைந்துள்ளது. எனவே, பழுதடைந்த மின்கம்பங்களைச் சரிசெய்தும் தருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இடம்: பாம்பன்
நாள்: 18/08/2021
இப்படிக்கு,
முத்து
உறைமேல் முகவரி :
பெறுநர்
மின்வாரிய அலுவலர் அவர்கள்,
மின்வாரிய அலுவலர் அலுவலகம்,
இராமநாதபுரம்
Tags:
letter