யாதும் ஊரே யாவரும் கேளிர் என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.
குறிப்புச்சட்டம்
- முன்னுரை
- சிந்தனை
- இயற்கைக் கல்வி
- உலக இலக்கியம்
- வளர்ச்சி
- மூவகையுள்ளம்
- முடிவுரை
முன்னுரை:
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உலக ஒருமைப்பாடு அமைய வேண்டும் என்னும் எண்ணம் நம் பைந்தமிழ்ப் பாவலர் நெஞ்சத்தில் மலர்ந் தமையை, "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்னும் சொல்லோவியம் உணர்த்துகின்றது. தன்னலம் விடுத் துப் பொது நலம் பேண வேண்டும் என்னும் உயரிய கருத்தினை இஃது நமக்கு அறிவிக்கின்றது.
சிந்தனை:
சிந்தனை செயலின் அடிப்படை. சிந்தனை வளர்ச்சி பெற்றால் செயலில் வளர்ச்சி பெற முடியும். செயலும் சிந்தனையும் வளர்ச்சி பெறும்பொழுது மனிதர் களுக்கு நிறம், இனம், சமயம் முதலிய வேறுபாடுகளைக் கடந்து 'உலகவர்' என்ற எண்ணம் தோன்றும். இவ் வுலகம் நம் வீடு, இவ்வுலகிலுள்ளவர்கள் எல்லோரும் நம் உடன் பிறந்தவர்கள் என்ற கருத்துப் பிறக்கும். உலகம் அளாவிய அன்பு மலர்வதற்கு இவையே சிறந்த சாதனங்களாம்.
இயற்கைக் கல்வி:
இருள் சூழ்கிறது. குடிசையைத் தங்குமிடமாக மனிதன் அமைத்துக் கொள்கின்றான். துயில்கின்றான். பின்பு கதிரவன் மெல்லக் கீழ்வானில் தோன்றியதும், விரிந்த வானத்தையும் பரந்த கடலையும், ஓங்கி உயர்ந்த மலைகளையும், பரவலான சமவெளிகளை யும் காணுகின்றான். அப்பொழுது அவன் மனம் விரி வடைகின்றது. இங்ஙனம் இயந்கையை நோக்கும் பொழுதும், இயற்கைக் கல்வியைப் பயிலும் பொழுதும், இயற்கையில் இறைவனின் அருள் திறத்தை அறியும் பொழுதும் உலகம் அளாவிய அன்பு இயற்கையாகவே தோன்றுகின்றது.
உலக இலக்கியம்:
ஒற்றுமையை உணர்த்தும் உயிர்க் கருத்துத்தான் "யாதும் ஊரே யாவரும் கேளிர்” இலக்கியம் உணர்த்த வேண்டிய உயர்ந்த பண்பாடும் இதுவேயாம். "யாதானும் நாடாமல் ஊராமால் என் னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு" என்ற குற ளில் கணியன் பூங்குன்றனார் கண்ட பண்பாட்டு நிலை இடம் பெறுவதைக் காணலாம். "கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு' என்ற மொழி வேற்றுமையுள் ஒற்றுமை காணும் சிறந்த விளக்கமாகும்.
தமிழ் இலக்கிய ஆசிரியர்களில் பெரும்பாலோர் உலகம் அளாவிய அன்பு வாழ்வு அமைய வேண்டும் என்னும் நோக்கினர். திருவள்ளுவர் தம் நூலின் முதற் குறளில் "அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு'' என்றும், சேக்கிழார், உல கெலாம் உணர்ந்தோதற் கரியவன்'' என்றும், கம்பர், “உலகம் யாவையும் தாமுள வாக்கலும்'' என்றும் கூறியிருப்பதிலிருந்து நன்கு புலனாம்.
வளர்ச்சி:
வாழ்வு மனிதனைப் பண்படுத்துகின்றது. இளமையில் தனக்கென்று வாழுகின்றான். இளமையும் எழிலும் நிறைந்த நங்கையுடன் வாழும் பொழுது தன்னை மறந்து அவளுக்காக வாழுகின்றான். குழந்தை பிறந்ததும் அன்பு அதனினும் விரிவடைகின்றது. விருந்தோம்புதல், உறவினர்களைப் பேணுதல், ஒப்புர வறிதல் போன்ற கடமைகளை மேற்கொள்ளும்போது அன்பின் தன்மையிலே பெரிய வளர்ச்சியைக் காணு கின்றோம். இவ்விதம் மெல்ல மெல்லத் தன்னலம் கரைந்து பொது நலம் மிகுந்து உலகவனாய் வாழும் மன நிலை பெறுகின்றான்.
மூவகையுள்ளம்:
தன் மனைவி வீடு வாசல் சோறு என்று வாழ்பவன் மனமோ கடுகு போன்று சிறியது. தன் ஊர் அளவில் அன்பு காட்டுபவன் மனமோ சிறிய கடுகைக் காட்டிலும் கொஞ்சம் பெரிய துவரை போன் றது. தன்னாட்டளவில் அன்பு கொண்டு, பிற நாடுகள் மீது பகைமை கொள்பவன் மனமோ அதனினும் பெரிய தேங்காய் போன்றது. ஆனால் உலகிலுள்ள மக்களெல் லாம் 'ஒன்று' என்று எண்ணுகின்ற உள்ளந்தான் தாயுள்ளம். அஃதே தன்னலம் நீங்கிய இன்ப உள்ளம். இவ்வுள்ளமே "யாதும் ஊரே யாவரும் கேளிர்'' என்று கருதும் கவிதை உள்ளம்.
முடிவுரை:
உலகில் ஒருபகுதி வறுமையுற்றாலும் உலகமாம் அன்னை வருந்துவாள். உலகில் எல்லோர்க் கும் இன்பம், நல்வாழ்வு, செல்வம் கிடைத்தால் உலக மாம் அன்னை இன்புறுவாள் ன்புறுவாள் இந்நோக்கம் நிறைவு பெறவே ஐ.நா மன்றம் பாடுபடுகின்றது மக்கள் அனை வரும் ஒத்துழைத்தால் பூங்குன்றனார் கண்ட அருளுலகம் மலரும் என்பதைக் கூறவும் வேண்டுமோ?