ரிஷப லக்னம் கொடுப்பினைகள் மற்றும் பிரச்சினைகள்

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கான பொதுவான பிரச்சனைகள் கொடுப்பினைகள், இவர்கள் வாழ்க்கையில் முன்னேற இவர்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது, இது போன்ற சில முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன அவற்றை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷப லக்னம் உறவினர்கள்

ரிஷப ராசி ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இருக்கக் கூடிய பிரச்சினை என்னவென்றால் இவர்களுக்கு உறவுகள் மூலமாகவும் சொந்தங்கள் மூலமாகவும் எந்த ஒரு உதவியும் இருக்காது எந்த ஒரு ஆதாயமும் இருக்காது எந்த ஒரு பயனும் இருக்காது.

எல்லா உறவினர்களும் சொந்தக்காரர்களும் இருந்தும் இவர்களுக்கு அவர்கள் மூலமாக பயன் இல்லாமல் இருக்கும்.அதாவது உறவினர்களாலும் சொந்தங்களும் வரக்கூடிய அனுதாபம் அனுசரிப்பு உபாசனைகள் இவர்களுக்கு இருக்காது.

உறவினர்களும் சொந்தக்காரர்களும் இருப்பதும் ஒன்றுதான் இல்லாததும் ஒன்றுதான் போன்ற மனோபாவம் தான் இவர்களுக்கு இருக்கும்.

ரிஷப லக்னம் குணம்

இந்த ரிஷப லக்னக்காரர்கள் போன்று வைராக்கியம் மிக்கவர்கள் யாருமே கிடையாது.இவர்கள் பிறப்பிலேயே மிகவும் வைராக்கியம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் வைராக்கியத்தை உடைப்பதற்கு யாராலும் முடியாது.

அதாவது யாராவது இவர்களை திட்டிவிட்டாலோ அசிங்கப்படுத்திவிட்டாலோ இவர்களுக்கு துரோகம் செய்து விட்டாலோ அவ்வளவு தான் அவர்களிடம் அவ்வளவு சீக்கிரமாக இவர்கள் பேச மாட்டார்கள் சேரமாட்டார்கள்.

இவர்கள் எடுக்கும் கொள்கை முடிவில் இருந்து என்றைக்குமே இவர்கள் மாற்றிக் கொள்ள மாட்டார்கள்.தான் எடுத்த கொள்கை முடிவில் தான் சரியாகவும் நிலையாகும் இருப்பார்கள்.

ரிஷப லக்னக்காரர்கள் தன்னுடைய வைராக்கியத்தை உடைத்துக் கொள்ள வேண்டும் ஏனென்றால் தேவையில்லாத வைராக்கியத்தின் மூலம் பல உறவுகளையும் பல விஷயங்களையும் வாழ்க்கையில் இவர்கள் இழக்க நேரிடும்.

எனவே ரிஷப லக்னக்காரர்கள் தன்னுடைய வைராக்கியத்தை குறைத்துக் கொண்டால் அவர்கள் வாழ்க்கையில் கண்டிப்பாக வெற்றி பெற முடியும்.

ரிஷபராசி ரிஷப லக்னக்காரர்கள் இவர்களின் மூளை எப்போதுமே ஒரு விஷயத்தை நினைத்து கொண்டு அசைபோட்டுக் கொண்டே இருக்கும்.ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி யோசித்துக் கொண்டே இருப்பார்கள்.

இவர்களின் மூளையை சும்மா இருக்க வைக்க மாட்டார்கள்.ஏதாவது ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ள வேண்டும்.ஏதாவது ஒரு வித்தையை கற்க வேண்டும் என்ற ஆசை இவர்களின் மூளையில் இருந்து கொண்டே இருக்கும்.சும்மா இருக்கும் நேரத்தில் ஒரு புத்தகத்தைப் படிப்பது இல்லை என்றால் ஒரு வித்தை கற்றுக் கொள்வது இது சார்ந்த விஷயங்களில் அதிகமாக ஈடுபாடு இவர்களுக்கு இருக்கும்.

ரிஷப ராசி ரிஷப லக்னக்காரர்கள் எவ்வளவுக்கு எவ்வளவு வித்தை சார்ந்து ஒரு விஷயத்தை கற்றுக் கொள்கிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு தங்களுடைய திறமை வளர்ச்சி அடையும் அதன் மூலம் எதிர்காலத்தில் இவர்களுக்கு நல்ல வளர்ச்சி இருக்கும்.

இவர்கள் வித்தை சார்ந்த ஒரு விஷயத்தில் எவ்வளவுக்கெவ்வளவு தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு இவர்களின் திறமை அதிகரிக்கும்.இவர்கள் எவ்வளவுதான் புத்தகத்தைப் படித்தாலும் எவ்வளவு தான் வித்தையைக் கற்றுக் கொண்டாலும் இவர்களுக்கு ஆசை தீரவே தீராது.

இவர்களுக்கு ஒழுங்காக தூக்கம் என்பது வராது.இவர்கள் நினைக்கும் போது இவர்களுக்கு தூக்கம் வராது.தூங்கவும் முடியாது.ஏனென்றால் இவர்களின் மூளை எப்போதுமே எதைப் பற்றியாவது யோசித்துக் கொண்டே இருக்கும்.

எந்த ஒரு விஷயமும் நடப்பதற்கு முன்பாகவே அந்த விஷயம் நடந்தது மாதிரி கற்பனை திறன் இவர்களுக்கு அதிகமாக இருக்கும்.மேலும் இவர்கள் கற்பனை திறன் அதிகம் மிக்கவர்களாக இருப்பார்கள்.ரிஷப லக்னக்காரர்கள் போன்று கற்பனை திறன் கொண்டவர்கள் இந்த உலகத்தில் யாருமே கிடையாது எப்போதுமே கற்பனை உலகத்திலேயே வாழ்பவர்கள்.

ரிஷப ராசி ரிஷப லக்னக்காரர்கள் இவர்களுக்கு இடைத்தரகர்கள் போன்ற திறமைகள் அதிகமாக இருக்கும்.இது சார்ந்து திறமைகளை இவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இவர்கள் இடைத்தரகர் போன்ற தொழில் செய்தால் அந்தத் தொழிலில் இவர்களை அடித்துக்கொள்ள யாராலும் முடியாது.பேச்சுத் திறமை மிக்கவர்களாக இருப்பார்கள்.எப்படிப்பட்ட விஷத்தையும் பேசியே ஜெயித்து விடுவார்கள்.

இவர்கள் எப்போதுமே அடுத்தவர்களுக்கு பஞ்சாயத்து செய்வது சமரசம் செய்வது போன்றவைகள் இருந்து கொண்டே இருக்கும்.அடுத்தவர்களுக்கு பஞ்சாயத்து செய்வது தான் இந்த ரிஷப லக்னக்காரர்களின் வேலையாகவே இருக்கும்.

தனது பேச்சுத் திறமை மூலம் எப்படிப்பட்ட விஷயத்தையும் சமரசம் செய்து விடுவார்கள்.

மேலும் இவர்களுக்கு ஒரு கூட்டத்தை தலைமை தாங்கும் திறமை அதிகமாக இருக்கும்.நிர்வாகம் செய்யக் கூடிய திறமைகள் இவர்களுக்கு பிறப்பிலேயே உண்டு.

இவர்களைப் பற்றி எப்போதுமே மற்றவர்கள் புரளி பேசிக்கொண்டே இருப்பார்கள்.தேவையில்லாமல் மற்றவர்கள் இவர்களைப் பற்றி சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிக்கொண்டே இருப்பார்கள்.

ரிஷப ராசி ரிஷப லக்னக்காரர்கள் இவர்களுக்கு கணினி,மொபைலை பயன்படுத்துவதில் அதிகமான திறமைகள் இருக்கும். இவற்றில் இவர்களை அடித்துக்கொள்ள யாராலும் முடியாது.

மேலும் இவர்கள் யாரைப் பற்றியும் தேவையில்லாமல் கருத்து சொல்லக்கூடாது.இவர்கள் யாரைப் பற்றி பேசினாலும் அவர்கள் இடத்திலேயே இவர்கள் என்ன பேசினார்கள் என்ற விஷயம் சென்று சேர்ந்துவிடும்.எனவே இவர்கள் யாரைப் பற்றியும் தேவை இல்லாமல் பேச வேண்டாம் அப்படி பேசினீர்கள் என்றால் பிறகு தேவையில்லாத பிரச்சனைகளை கண்டிப்பாக இவர்கள் சந்திப்பார்கள்.

ரிஷப லக்னக்காரர்களுக்கு வீடு வண்டி வாகனம் சொத்து சார்ந்த விஷயங்கள் மீது அதிகப்படியான ஆசை இருக்கும் இது அனைத்தும் அதிகமாக எனக்கு வேண்டும் இது அனைத்தும் அதிகமாக நான் அடைய வேண்டும் என்ற ஆசை இவர்களுக்கு எப்போதும் இருந்து கொண்டிருக்கும்.

காதல்

ரிஷப லக்னக்காரர்களுக்கு காதல் மூலமாகவும் காதலி அல்லது காதலன் மூலமாகவும் மற்றும் பூர்வீக சொத்து மூலமாகவும் மற்றும் மூத்த குழந்தை மூலமாகவும் கடன் பிரச்சினை வம்பு வழக்கு அடிதடி சண்டை போன்ற அனைத்து பிரச்சனைகளையும் இவர்கள் கண்டிப்பாக சந்திக்க நேரிடும்

காதல் சார்ந்த விஷயத்தில் ரிஷப லக்னக்காரர்கள் மிக மிக கவனமாக இருக்க வேண்டும் இவர்களுக்கு காதல் சரியாக அமையாது.

காதலி அல்லது காதலன் மூலமாகவே சத்துருக்கள் உருவாகுவது எதிரிகள் உருவாகுவது கடன் பிரச்சினை சிக்குவது போன்றவைகளை ரிஷப லக்னக்காரர்கள் கண்டிப்பாக சந்திக்க நேரிடும்.

தொழில்

ரிஷப லக்னக்காரர்கள் எங்கு சென்றாலும் அதாவது எந்த தொழில் செய்தாலும் எந்த உத்தியோகத்திற்கு சென்றாலும் இவர்களுக்கு இருக்கும் போட்டி பொறாமை எதிரிகள் யாருக்குமே இருக்காது அவ்வளவு இருக்கும்.எங்கு சென்றாலும் எந்த துறைக்கு சென்றாலும் மற்றவர்கள் இவர்களை போட்டியாகவே எடுத்துக் கொள்வார்கள்.இது சார்ந்த பிரச்சினைகளை அவர்கள் வாழ்க்கையில் அனுபவித்திருப்பார்கள்.

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்கள் என்றைக்கு இவர்கள் உத்தியோகத்திற்கு செல்கிறார்களோ அதன் மூலமாகவும் மற்றும் தாய்மாமா மூலமாகவும், அம்மாவின் இளைய சகோதரர்,அல்லது கடன் வம்பு வழக்கு போன்ற விஷயங்களின் மூலமாகவும் தான் இவர்களுக்கு வெளியுலக நட்பு, வெளியுலக அந்தஸ்து, யார் நல்லவர் யார் கெட்டவர் வெளி உலகம் என்றால் என்ன யாருடன் எப்படி பழக வேண்டும் என்ற பக்குவத்தை கற்றுக் கொள்வார்கள். மேலும் இதனை சார்ந்த விஷயங்களுக்காக எடைக்கு எடை பாதிக்குப் பாதி மற்றொன்று விஷயங்களை இவர்கள் இழந்திருப்பார்கள்.

மேலும் இவர்களுக்கு உத்தியோகத்திற்கு செல்லும்போதும் மற்றும் தாய்மாமா மூலமாகவும் அம்மாவின் இளைய சகோதரர் மூலமாகவும் இவர்களுக்கு வரன்கள் கிடைக்கும் மற்றும் திருமணமும் முடியும்.

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்கள் என்றைக்குமே கூட்டுத் தொழில் செய்யும் போது அதனை சார்ந்த விஷயங்களில் மற்றவர்களை ஏமாற்ற வாய்ப்புகள் கிடைத்தால் அதனை இவர்கள் செய்யவே கூடாது.

இந்த பதிவில் கூறப்பட்டுள்ள அனைத்து சூட்சுமங்களும் ரிஷப லக்னத்தில் பிறந்த ஆணுக்கும் பொருந்தும் பெண்ணுக்கும் பொருந்தும்.

Post a Comment

Previous Post Next Post