செவ்வாய் ராகு கிரகச் சேர்க்கை பற்றி இப்போது பார்ப்போம்.
செவ்வாய் ராகு சேர்க்கை
செவ்வாய் பெண்களுக்கு களத்திர காரகன். செவ்வாய் ராகு சேர்க்கை பெண்களுக்கு கடும் களத்திர தோஷத்தை ஏற்படுத்துகிறது. செவ்வாய் வக்கிரம் பெற்றால் அல்லது குருவின் பார்வை பெற்றால் கொஞ்சம் துன்பம் குறையும்.
வீட்டின் மீது கடன் கணவருடன் சண்டை நிலத்தின் மீது பிரச்னை,சகோதரன் வழியில் சண்டை
பெண்களுக்கு திருமணம் வாழ்வில் சலிப்பு.
மிருக குணம் அல்லது பிடிவாத குணம் அதிகம் உண்டு.எலும்பு தொந்தரரு ரத்தத்தில் தொந்தரவு கோபம் அதிகம் உண்டு உஷ்ணம் அதிகம் உண்டு
செவ்வாய் ராகு சேர்க்கை உள்ள ஆணோ அல்லது பெண்ணோ சொன்னதை சொன்ன நேரத்தில் செய்ய வேண்டும் என்று என்னும் குணம் உண்டு. அவ்வாறு செய்யவில்லை எனில் இவர்களுக்கு கோபம் மிகுதியாக வரும்.
நூறு சதவீதம் சரியாக இருக்க வேண்டும் என்று எதிர் பார்த்து தோல்வியை கொடுக்கும். தாமதம் இவர்களுக்கு பிடிக்காத ஒன்று.
இது உண்மையில் செவ்வாய் தோஷம் போன்றே செயல்படும்.
இவர்கள் சண்டைக்கோழிகள் எளிதில் யாருக்கும் அடங்க மாட்டார்கள். குறிப்பாக பெண்களுக்கு திருமணம் நடந்த பிறகு இந்தப் பிரச்சினை அதிகம் ஆகும்.
பெண்களின் திருமண வாழ்க்கையில் மிக பெரிய துன்பம் துயரம் உண்டு திருமண வாழ்க்கையில் பெண்களுக்கு தோல்வி தரும் கிரக சேர்க்கை இது (2 அல்லது 7 இல் இருந்தால்) சகோதரர்களால் வழக்கு வம்பு ஏற்படும்.
செவ்வாய் ராகு கிரக சேர்க்கை பரிகாரம்;
பரிகாரம் காலபைரவருக்கு செவ்வாய் கிழமையில் நெய் தீபம் ஏற்றுங்கள்.
பெண்களுக்கு ஒரு பரிகாரம் தான் உண்டு திருமண வாழ்க்கையில் வெற்றி பெற வாயை மூடி பேசாமல் இருப்பது சிறப்பு உங்களின் மூர்க்க குணம் மற்றும் பிடிவாதத்தை தவிர்ப்பது சிறப்பு.