27 நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணம் பகுதி-1

27 நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணத்தை(பகுதி-1) இந்த பதிவில் பார்ப்போம்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணம்

இந்த நட்சத்திரம் குதிரைத் தலையைப் போன்று வடிவமும் 3 நட்சத்திரக் கூட்டமும் கொண்டதாகும். ஒரு மனிதன் குதிரை சவாரி செய்வது போன்றும் கருதப்படும். அஸ்வினி தேவர்கள் அதி தேவதைகள், ஆண்பால். இது வடக்கு திசையையும் உடலில் பாதத்தில் மேல்பாகத்தையும் குறிக்கும்.கருடன் அசுவினியைக் குறிக்கும்.

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அழகாக இருப்பார்கள்.புதிய ஆடைகள் நகைகள் அணிந்து கொள்வதில் விருப்பம் உள்ளவர்கள்.நல்ல தோற்றமும், பொதுமக்களிடம் புகழும் உள்ளவர்கள். திறமை உள்ளவர்கள் மிகவும் புத்திசாலி.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பணிவுள்ளவர்கள், எல்லா வகையிலும் முன்னேற்றம் அடைவார்கள், செல்வம் உடையவர்கள், மக்களால் போற்றப்படுபவர்கள்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குணம்

இது மூன்று நட்சத்திரங்களை கொண்டது. முக்கோண வடிவமுள்ளது. இதன் தேவதை எமன்.இந்த நட்சத்திரம் வடகிழக்கு திசையில் ஆதிக்கமுள்ளது. இது உள்ளங்காலிலும் ஆதிக்கம் உள்ளது. இது காக்கைப் பறவையால் குறிக்கப்படும்.

இதில் பிறந்தவர்கள் எடுத்த காரியத்தில்  வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள். உண்மையானவர்கள் இவர்கள் பெரும்பாலும் நோயின்றி வாழ்வதற்கு ஏற்ற வாழ்க்கை நடைமுறைகளை கடைபிடித்து வாழ்பவர்கள். எதற்கும் கவலைப்பட மாட்டார்கள். இவர்களுக்கு கோபம் வந்தால் பொல்லாத செயல்களையும் துணிந்து செய்வார்கள். இதனால் சிலசமயம் மற்றவர்கள் கண்டனத்திற்குள்ளாவார்கள். பலவகை இன்பங்களை அனுபவிப்பார்கள்.நீச்சல் குளங்களில் அல்லது கிணறுகளில் அதிக நேரம் குளிப்பது இவர்களுக்கு பிடிக்கும் . சில சமயம் காம எண்ணங்கள் மிகுதியாக இருக்கும்.

கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குணம்

இது ஆறு நட்சத்திரங்களையுடையது. தீக்கொழுந்துகள் சுடர்விட்டு எரிவது போன்ற தோற்றம் உள்ளது. இதன் அதிதேவதை அக்கினி.உடலில் தலையைச் குறிக்கும். இது பறவையில் மயிலைச் குறிக்கும். நெருப்பு, பாத்திர வடிவமைப்பு, இரும்பு சாமான் உற்பத்தி விபசாரி போன்ற தொழிலை குறிக்கும். 

கார்த்திகை நட்சத்திரகாரர்கள் சாப்பிட்டு பிரியர்கள்‌. எதிர்பாலினத்தின் மீது  மோகமுள்ளவர்கள். நல்ல தோற்றமும் பேரும் புகழுமுள்ளவர்கள்

இவர்கள் பசி பொறுக்க மாட்டார்கள் இவர்கள் அதிகம் பொய் பேசுபவர்களாக இருப்பார்கள். குறிக்கோளின்றி ஊர் சுற்றுபவர்கள். பைக்கில் நீண்ட தூரம் செல்வது இவர்களுக்கு பிடிக்கும். பிறருக்கு தீமை தரும் செயல்களையே செய்பவன். அதேசமயம் தனக்கு பிறர் செய்த உதவியை எளிதில் மறந்து விடுவார்கள்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குணம்

இந்த நட்சத்திரம் மீனின் வடிவமுள்ளது. இதன் அதி தேவதை பிரம்மா. உடலில் இது நெற்றியை குறிக்கும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பணக்காரனாக இருப்பான்(தனது தந்தையை விட). 

விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஆர்வம் அதிகம் இருக்கும் (ஐடி கம்பெனியில் வேலை பார்த்த பலர் விவசாயத்திற்கு திரும்பியதற்கு இந்த நட்சத்திரத்தில் இருந்து ஏதாவது ஒரு கிரகம் தசை நடைத்துவதும் ஒரு காரணம்). இவர்கள் உண்மையானவர்கள் பிறர் பொருள்மேல் பற்றில்லாதவர்கள்‌. இவர்கள் நல்ல குணம் உள்ளவர்கள்.இனிமையாக பேசுவதில் வல்லவர்கள். திடகாஸ்திரமான உடலும் அழகிய தோற்றமும் உள்ளவர்கள்.

அனைத்து விஷயங்களிலும் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்வார்கள். நற்செய்கைகளைச் செய்வதிலும் வல்லவர்கள். உடல் அங்கங்கள்யாவும் இலக்கணப்படிஅமைந்த அழகிய தோற்றமும் அவர்கள். காம எண்ணம் அதிகம் உள்ளவர்கள். இவர்கள் கௌரவத்திற்கு  முக்கியத்துவம் தருவார்கள்.

மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குணம்

இது மானின் தலை போன்ற தோற்றமுள்ள 3 நட்சத்திரங்களால் ஆனது. சிலர் இதனை பூனைப் பாதம் போன்றுள்ளது என்றும் கூறுவர். இதன் அதிதேவதை சந்திரன். உடலில் இது கண் புருவங்களைக் குறிக்கும். 4 கால் சீவன்களைக் குறிக்கும். மத பிரச்சாரம், ஓவியம், எழுத்துத் தொழில் போன்ற தொழில்களைச் செய்பவர்கள். 

இசைகளில் ஆர்வம் இருக்கும். வாசனைப் பொருள், ஆடையாபரணங்கள் மீது ஆசையுள்ளவர்கள். விலை உயர்ந்த செ

மலர்கள், ரத்தினங்கள், வன விலங்குகள், மான், பறவைகள் போன்றவற்றிலும் பற்றுள்ளவர்கள்.வெகுளியான குணமுள்ளவர்கள். ஒரு தடவை முடிவு எடுத்து விட்டாள் அந்த முடிவில் இருந்து பின்வாங்க மாட்டார்கள்.எல்லாரிடமும் பணிவும் விசுவாசமும் உள்ளவர்கள்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குணம்

ஒற்றை நட்சத்திரம். ஒரு ரத்னம் போலவும், தாமரை மொட்டு போலவும் வடிவமுள்ளது. இந்த நட்சத்திரத்தின் அதிதேவதை ருத்ரன் அல்லது சிவன்.  கிழக்கு திசையை குறிக்கும். உடலில் கண்களையும் இடுப்புப் பகுதியையும் குறிக்கும். சிலசமயம் இரக்கமற்ற, கொடுமையான செயல்களையும் செய்பவர்களாகவும் இருப்பார்கள். இதில் பிறந்தவர்கள் உண்மையானவர்கள், பொறுமை சிறிதும் அற்றவர்கள். சாப்பாட்டு பிரியர்கள். தங்களுக்கு உதவி செய்தவர்களுக்கு இவர்களால் தக்க சமயத்தில் உதவ முடியாது.

அழகான தோற்றம் உடையவர்கள் சண்டை சச்சரவுகளில் பிரியமுள்ளவர்கள். தனக்குத்தீங்கு இழைத்தவர்களை மன்னிக்காதவர்கள்.

புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குணம்

இந்த நட்சத்திரம் வில்லைப் போன்று வடிவமுடையது. ஐந்து நட்சத்திரங்களைக் கொண்டது. இதன் அதிதேவதை அதிதி. கிழக்கே திசையில் ஆதிக்கம் கொண்டது. உடலில் மூக்கைக் குறிக்கும்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையாகவும், தாராள சிந்தை உள்ளவர்களாகவும், மரியாதைக்குரியவர்களாகவும், தூயவர்களாகவும், செல்வந்தர்களாகவும், தன்னை எப்பொழுதும் அழகுபடுத்திக் கொள்வதில் ஊக்கம் உள்ளவர்களாகவும், சிற்பிகள், ஓவியர்கள், ஆகிய கலைஞர்களிடையே பெரும்பாலும் நண்பர்கள் அதிகம் உள்ளவர்களாக இருப்பர். ஆன்மீக நூல்கள் படிப்பதில் ஆர்வமுடையவர்கள். ஆடை அணிகலன்களில் ஆர்வமுடையவர்கள்.

தொடர்புடைய பதிவுகள்:

27 நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குணம் பகுதி-2

குறிப்பு:

இங்கு கொடுக்கப்பட்டுள்ள பலன்கள் பொதுப் பலன்கள் மட்டுமே. தசாபுத்தி மற்றும் லக்னத்தை பொறுத்து பலன்கள் மாறுபடும்.

Post a Comment

Previous Post Next Post