சுக்கிரன் கேது சேர்க்கை பலன்

ஒருவருடைய ஜாதகத்தில் களத்திர காரகரான சுக்கிரன் மற்றும் கேது சேர்ந்திருந்தால் என்ன பலன் என்று இப்போது பார்ப்போம்.

எது சுக்கிரன் கேது சேர்க்கை:

ராசிக்கட்டத்தில் சுக்கிரன் நின்ற ராசிக்கு 1,5,9 அல்லது 2ல் கேது நின்றால் அது சுக்கிரன் கேது சேர்க்கை எனப்படும். சுக்கிரன் கேது சேர்க்கையால் உண்டாகும் பலன்கள் கீழே தரப்பட்டுள்ளன. 

சுக்கிரன் கேது சேர்ந்திருந்தால் என்ன பலன் 

  1. ஜாதகருக்கு கன்னத்தில் அதிகம் முடி வளரும்.
  2. ஜாதகருக்கு வீடு, வாகனம், பணம் சம்பந்தமான வழக்குகள் வரும்.
  3. ஜாதகருக்கு மனைவியுடன் கருத்து வேறுபாடு அல்லது பிரிவினை உண்டாகும்.
  4. ஜாகரின் வீட்டில் சமையலறை மிகவும் சிறியதாக இருக்கும். 
  5. ஜாதகரின் மனைவி மன விரக்தியுடையவராக இருப்பார்.
  6. ஜாதகர் பெண்ணானால் தனிமை விரும்பியாக இருப்பார். கூட்டத்தோடு இருப்பதை விட தனிமையில் இருப்பதையே விரும்புவார்.
  7. ஜாதகர் பெண்ணானால் மன விரக்தியுடையவர்.
  8. ஜாதகர் பெண்ணானால் கருப்பை மற்றும் யோனிக்குழாய் சிறுத்து இருக்கும். 
  9. ஜாதகருக்கு கணையத்தின் செயல் பாடுகளில் தடை இருக்கும்.
  10. ஜாதகருக்கு புத்திர பாக்கியம் ஏற்படுவதில் தடைகள் இருக்கும்.
  11. ஜாதரின் மனைவி வழி உறவுகளுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.
  12. ஜாதகருக்கு பொருள் சுகங்களை அனுபவிக்க முடியாமல் தடைகள் உண்டாகும்.
  13. ஜாதகர் சொகுசுப்பொருட்களை வாங்கி பயன்படுத்த முடியாமல் சும்மா வீட்டில் வைத்திருப்பார். 
  14. ஜாதகர் சிறிய வீட்டில் குடியிருப்பார்.
  15. ஜாதகர் சிறிய ரக வாகனங்களையே பயன்படுத்துவார்.
  16. ஜாதகர் இளம் பெண்களுடன் கருத்து வேறுபாடு கொள்வார்.
  17. ஜாதகர் பெண்ணானால் சக பெண்களுடன் கருத்து வேறுபாடு இருக்கும்.
  18. அத்தை வழி உறவுகளுடன் கசப்பு இருக்கும்.
  19. ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் கேது சேர்ந்திருந்தால் ஜாதகர் மனைவி அடிக்கடி விரதம் இருப்பார்.
சித்தயோகி சிவதாசன் ரவி ஐயா அவர்களுக்கு நன்றி 

Post a Comment

Previous Post Next Post